சிபிஐ விசாரணைக்கு மாற்றி என்ன ஆகப்போகிறது?.. ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: புதுக்கோட்டை இடையூரில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் தற்போதைய நிலை அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிபிஐயில் போதிய அதிகாரிகள் இல்லை, அங்கு மாற்றி என்ன ஆகப்போகிறது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, அந்த வழக்கை விசாரித்த பல அதிகாரிகள் ஓய்வு பெற்று சென்று விட்டனர் எனவும் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.