ராகுல் காந்தி மேட்டர்; மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு திருமாவளவன் அறைகூவல்.!

ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்த விவகாரத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என

அறிவித்துள்ளார்.

‘‘அதெப்படி மோசடி பேர் வழிகள் அனைவரும் மோடி என்ற பெயரை தங்கள் பின்னால் வைத்திருக்கின்றனர்?” எனப் பேசி ராகுல் காந்தி சர்ச்சையில் சிக்கினார். இவர் நீரவ் மோடி, லலித் மோடி குறித்து பேச அப்படியே பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்ததாக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கு சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் கடந்த 23ம் தேதி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து அவர் எம்பியாக தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 8(3) படி, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எந்தக் குற்றத்திற்காகவும் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டால், அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்ற விதி உள்ளது. அதன்படி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கத்து.

காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டு, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவரது தண்டனை 30 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டாலும், நீதிமன்றத்தின் உத்தரவு அவரை சட்டத்தின் கீழ் தானாக நாடாளுமன்ற உறுப்பினராக தகுதி நீக்கம் செய்யும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது என்று சில சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏனெனில் இந்த விதிமுறைகளால் ராகுல் காந்தி இனி 8 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடதக்கது. ராகுல் காந்திக்கு ஆதரவாக காங்கிரஸின் பரம எதிரிகளான மம்தா பானர்ஜி, சந்திரசேகர ராவ், அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

அதேபோல் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் எனவும் அதானி மற்றும் பிரதமர் மோடியின் முறைகேடுகளை திசைதிருப்புவதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். அதேபோல் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

இந்தநிலையில் ராகுல் காந்திக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்துகளை கட்சி போராட்டத்தை அறிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பதிவில், ‘‘ராகுல் காந்தி அவர்களின் எம்.பி.பதவியைத் தகுதி நீக்கம் செய்தது திட்டமிட்ட பழிவாங்கும் அற்ப அரசியல் நடவடிக்கையே ஆகும். இது இயல்பாக நடந்தேறிய சட்ட நடவடிக்கை என்னும் தோற்றத்தை உருவாக்கும் முயற்சியில் சங்பரிவார்கள் ஈடுபட்டாலும் மக்களிடையே அம்பலப்பட்டு நிற்கிறார்கள்.

மோடி அரசின் இத்தகைய சனநாயக விரோத – ஃபாசிசப் போக்கைக் கண்டித்து விசிக சார்பில் எனது தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். தோழமைக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கிற வகையில் ஒருங்கிணைக்கப்படும். ஆர்ப்பாட்ட நாள் பின்னர் அறிவிக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.