எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு


கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல முனையங்களில் எரிபொருள் விநியோகம் இன்று (29.03.2023) காலை 6 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

டுவிட்டர் பதிவொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அதில், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு பொலிஸாரும், இராணுவத்தினரும் தொடர்ந்தும் ஆதரவளிப்பார்கள்.

அத்துடன், நாட்டில் போதியளவு எரிபொருள் இருப்புக்கள் உள்ளது.

எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு | Kanchana Wijesekara Fuel Distribution

எரிபொருள் விலை திருத்தம்

ஏப்ரல் மாத விலை திருத்தத்தை எதிர்பார்த்து சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருளை ஆர்டர் செய்யவில்லை.

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் ஆர்டர்களை பெற்று குறைந்தபட்ச இருப்புக்களை பேணுமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.