தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாகிறது … சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்

தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார் வருவாய்த்துறை மானிய கோரிக்கையின் போது பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நிர்வாக காரணங்களுக்காக தமிழகத்தில் மேலும் 8 மாவட்டங்களை உருவாக்குவதற்கு எம்.எல்.ஏ.க்கள்,எம்.பி.க்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாவட்டங்களை பிரிப்பது குறித்து நிதிநிலைக்கு ஏற்ப முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று அவர் தெரிவித்தார். திண்டுக்கல், தூத்துக்குடி, தஞ்சை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை பிரித்து புதிதாக கோவில்பட்டி, பழனி, கும்பகோணம், ஆரணி உள்ளிட்ட மாவட்டங்கள் உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.