"கதவ பூட்டலயா நீ".. திடீரென திறந்த சர்க்கஸ் கூண்டு.. பார்வையாளர்கள் மீது பாய்ந்த சிங்கங்கள்.. என்னாச்சு?

பெய்ஜிங்:
சீனாவில் சர்க்கஸ் ஒன்றில் இன்று அதிபயங்கர சம்பவம் நடந்திருக்கிறது. சர்க்கஸ் கூண்டில் இருந்த சிங்கங்கல் அப்படியே பார்வையாளர்கள் மீது பாய்ந்திருக்கின்றன. என்ன ஆனது.. ஆட்கொல்லி சிங்கங்களிடம் இருந்து மக்கள் தப்பித்தார்களா.. வாங்க பார்க்கலாம்.

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
சீனாவுக்கும், சர்க்கஸுக்கும் இது போதாத காலம் போல இருக்கிறது. அங்கு நேற்று நடந்த ஒரு சர்க்கஸில் நெஞ்சை உருக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியது. ஆன்குய் மாகாணத்தில் நடந்த அந்த சர்க்கஸில் கணவனும், மனைவியும் சேர்ந்த பல அடி உயரத்தில் கயிற்றில் ஜிம்னாஸ்டிக் சாகசங்களை செய்து கொண்டிருந்தனர்.

இந்த சாகசத்தின் ஒருபகுதியாக, இருவரும் அந்தரத்தில் குட்டிக்கரணம் அடித்து, கணவன் கயிற்றை பிடிக்கும் போது, சரியாக கணவரின் கையை மனைவி பிடிக்க வேண்டும். இதுதான் டைமிங். ஆனால், கணவர் குட்டிக்கரணம் அடிக்க ஒரு நொடி தாமதமானதால் அவரது கையை பிடிக்க முடியாமல் மனைவி கீழே விழுந்து உயிரிழந்தார்.

ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையிலேயே இந்த சம்பவம் நடைபெற்றால் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தங்களுக்காக கயிற்றில் சாகசம் செய்து உயிரிழந்த தங்கள் தாயை பார்த்து அப்பெண்ணின் இரண்டு பிஞ்சு குழந்தைகளும் கதறி அழுதம் காண்போரின் நெஞ்சை உலுக்கியது.

‘டீன் ஏஜ்’ மாணவர்களுடன் பள்ளியிலேயே ‘செக்ஸ்’.. கையும் களவுமாக சிக்கிய 6 ஆசிரியைகள்.. அதிர்ச்சியில் அமெரிக்கா!

இந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் ஓய்வதற்குள்ளாக, மீண்டும் ஒரு பயங்கர சம்பவம் சீனாவில் நடந்திருக்கிறது. சீனாவின் ஹேனான் மாகாணத்தில் உள்ள லுயோயாங் நகரில் இன்று சர்க்கஸ் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது இரண்டு சிங்கங்களை பெரிய இரும்புக் கூண்டுக்குள் வைத்து அவற்றை நெருப்பு வளையத்துக்குள் தாண்ட வைப்பது போன்ற சாகசங்கள் நடந்து கொண்டிருந்தன. கூண்டுக்குள் இருந்த 2 ரிங் மாஸ்டர்களின் பேச்சை கேட்டு அந்த 2 ஆண் சிங்கங்களும் சாகசத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன.

அப்போது ஒரு சிங்கம் கம்பியை தாண்டும் போது கதவில் லேசாக மோத, கதவு படாரென திறந்தது. இதை பார்த்த அந்த சிங்கம், அப்படியே பார்வையாளர்கள் மாடத்தில் பாய்ந்தது. அதை தொடர்ந்து, மற்றொரு சிங்கமும் பார்வையாளர்கள் மீது பாய.. அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. ஒருவரை மட்டும் சிங்கம் பிராண்டியதாக கூறப்படுகிறது.

ரிங் மாஸ்டர்கள் உடனடியாக சிங்கங்களை மடக்கி பிடித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கூண்டின் கதவை ரிங் மாஸ்டர்கள் பூட்ட மறந்ததே இந்த சம்பவத்துக்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அலட்சியமாக செயல்பட்டதாக அவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.