“வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்” – அங்கன்வாடி ஊழியர்கள் கண்களில் கறுப்புத் துணி அணிந்து ஆர்ப்பாட்டம்

மதுரை: தேர்தல் கால வாக்குறுதியை நடப்பு பட்ஜெட் தொடரில் நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு சத்துணவு – அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாவட்ட தலைநகரங்களில் கண்களில் கறுப்புத் துணி அணிந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு கிராம உதவியாளருக்கு வழங்குவதுபோல், ரூ.6,850 அகவிலைப்படியுடன் ஒய்வூதியம் வழங்க வேண்டும்.சத்துணவு மற்றும் அங்கன்வாடி அமைப்பாளர்களை, அரசுத் துறை காலிப் பணியிடங்களில் பணி மூப்பு அடிப்படையில் 50 சதவீதம் பதவி … Read more

கர்நாடகா | பிரதமர் மோடி படத்துக்கு முத்தம் கொடுத்த முதியவர் – சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ

பெங்களூரு: கர்நாடகாவில் வருகிற மே 10-ம்தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இங்கு ஆட்சியை கைப்பற்ற ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மூன்று கட்சிகளை சேர்ந்த முக்கியத் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆளும் பாஜக அரசின் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாக பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த … Read more

ஐபிஎல் டி20 கிரிக்கெட்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!…

லக்னோ: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில்  டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணிக்கு 194 ரன்களை வெற்றி இலக்காக லக்னோ அணி நிர்ணயித்தது. பின்னர் டெல்லி அணி 20 ஓவர்களில் முடிவில் 143 ரன்கள் எடுத்த நிலையில் தோல்வி அடைந்தது.

குறைந்த அளவு மருந்து இருப்பு வைத்திருப்பதால் மருத்துவர்களை தண்டிக்க முடியாது: உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி: குறைந்த அளவு மருந்து இருப்பு வைத்திருப்பதால் மருத்துவர்களை தண்டிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. குறைந்த அளவிலான மருந்துகளை மருத்துவர்கள் இருப்பு வைத்திருப்பது என்பது குற்றமாகாது என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் மீதான வழக்கில் நடவடிக்கை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

பாரதிராஜா நடிப்பில் மனோஜ் இயக்கும் மார்கழி திங்கள்

பாரதிராஜா இயக்கத்தில் தாஜ்மஹால் என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானவர் அவரது மகனான மனோஜ் பாரதிராஜா . அதன் பிறகு சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், விருமன், மாநாடு என பல படங்களில் நடித்தார் மனோஜ். இந்த நிலையில் தற்போது தனது தந்தையான இயக்குனர் பாரதிராஜா நடிப்பில் மார்கழி திங்கள் என்ற படத்தை அவர் இயக்கப் போகிறார். ஜீ.வி .பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. தற்போது இப்படத்தின் … Read more

Ajith latest news: காதல் மன்னன் அஜித் ரசிகாஸ்.. ஸ்வீட் நியூஸ்.. டிஜிட்டலில் வெளியாகிறது \"அமராவதி\"

சோழா கிரியேஷன்ஸ் சார்பில், 1993-ம் ஆண்டு சோழா பொன்னுரங்கம் தயாரித்து, வெளியான படம் “அமராவதி”. அஜித் அரும்பு மீசையுடன் நடித்த இந்த காதல் காவியத்தில், ஜோடியாக சங்கவி நடித்திருந்தார். செல்வா இயக்கியிருந்தார்! அமராவதி படத்தின் மூலம் அஜித் குமாரை கதாநாயகனாக திரையுலகிற்கு சோழா பொன்னுரங்கம் அறிமுகப்படுத்தி, 30′ ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. எளிமை, அன்பு, கொடை என அனைத்து நற்குணங்களுக்கும் சொந்தக்காரராக உயர்ந்து நிற்கிறார் அஜித் குமார். அவருக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக, அஜித் ரசிகர்களின் … Read more

பங்குனி உத்திர திருவிழா தற்காலிக கடைக்கு நாள் வாடகை ரூ.5 ஆயிரம் குறைவுதான்! சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

திருவள்ளூர் : பங்குனி உத்திர திருவிழாக்கு தற்காலிகமாக அமைக்கப்படும் சிறு கடைகளுக்கு வாடகை நிர்ணயித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் முதல் நிலை கிராம பஞ்சாயத்து தலைவர் ஜெயலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவரின் அந்த மனுவில், “பாடியநல்லூர் கிராமத்தில் அருள்மிகு முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, … Read more

ரூ.6 லட்சத்துக்கு ஆன்லைனில் இட்லி ஆர்டர் செய்த நபர் – சுவாரஸ்ய தரவுகளை வெளியிட்ட டெலிவரி நிறுவனம்!

இட்லி தென்னிந்தியர்களின் பிரதான காலை உணவாக இருந்து வருகிறது. தென்னிந்தியா மட்டுமல்லாது டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களில்கூட இட்லி பிரபலமாக இருக்கிறது. உலக இட்லி தினத்தையொட்டி ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் பிரபல நிறுவனமான ஸ்விக்கி கடந்த ஓர் ஆண்டில் எங்கு அதிக அளவு இட்லி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இதில் இட்லி அதிகம் ஆர்டர் செய்த நகரங்கள் பட்டியலில் பெங்களூரு முதலிடத்தில் இருக்கிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகமிருக்கும் இங்கேதான் … Read more

ஆங்கிலேயர்கள்தான் நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்தினர் – கல்லூரி விழாவில் ஆளுநர் பேச்சு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி 50-வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கல்லூரி ஆட்சிமன்றக் குழுத் தலைவர் கே.ஜி.பிரகாஷ் வரவேற்றார். கல்லூரி செயலர் எஸ்.சிங்கராஜ் கல்லூரியில் 50 ஆண்டுகால செயல்பாடு குறித்த அறிக்கையை வாசித்தார். பளையபாளையம் இராஜுக்கள் மகமை பொதுபண்டு தலைவர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா, ராம்கோ குழும தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர். பொன்விழா அறிவியல் வளாக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், ‘‘ராஜபாளையத்தை சேர்ந்த … Read more