திருப்பதியில் ஆயுர்வேத மருந்து தயாரிப்பு மையம் திறப்பு ஆண்டுக்கு ₹5 கோடி மருந்துகளை உற்பத்தி செய்ய இலக்கு

*ஆயுஷ் மருத்துவமனைகளுக்கு சப்ளை *அறங்காவலர் குழு தலைவர்  தகவல் திருமலை : திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா ஆயுர்வேத மருந்தகத்தில், புதிய ஆயுர்வேத மருந்து தயாரிப்பு மையத்தை திறந்து வைத்த அறங்காவலர் குழு தலைவர், ஆண்டுதோறும் ₹5 கோடி மதிப்பில் ஆயுர்வேத மருந்துகளை உற்பத்தி செய்யவும், ஆயுஷ் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், திருப்பதி அடுத்த நரசிங்கபுரம் பகுதியில் ஸ்ரீவெங்கடேஸ்வரா ஆயுர்வேத மருந்தகம் உள்ளது. இங்கு புதிதாக கட்டியுள்ள ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பு மையத்தை … Read more

ரிஷிகளாலும் வேதங்களாலும் உருவானது தான் இந்தியா! ராஜபாளையத்தில் ஆளுநர் ரவி பேச்சு!

Tamilnadu oi-Arsath Kan விருதுநகர்: ரிஷிகளாலும் வேதங்களாலும் உருவானது தான் இந்தியா என ராஜபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் ரவி பேசியிருக்கிறார். இந்தியா ராஜாக்களால் உருவாக்கப்பட்டதில்லை என்பதையும் அவர் தெரிவித்திருக்கிறார். ரிஷிகளிடம் இருந்தும் வேதங்களில் இருந்தும் கிடைத்த அறிவொளி தான் மக்களை வழிநடத்துவதாகவும் கூறியிருக்கிறார். ஆளுநர் ரவி ஆளுநர் ரவியின் பேச்சுக்களும் கருத்துக்களும் அவ்வப்போது மிகுந்த பரபரப்பை உருவாக்கும். கடந்த அக்டோபர் மாதம் சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய … Read more

கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர்

கீழடியில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு நடைபெற்றது. இதில் சேகரிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட அருங்காட்சியகம் ஒன்று உருவாக்கப்பட்டது. உலகதரத்தில் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் கடந்த மார்ச் மாதம் ஆறாம் தேதி அன்று பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. ஏப்ரல் ஒன்றாம் தேதியான இன்று முதல் பார்வையாளர்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழர்களின் தொல்லியல் வரலாற்றை பறைசாற்றும் இந்த அருங்காட்சியகத்தை தமிழ் மொழிக்கு இலக்கிய சேவையை இடையறாது செய்து வரும் நடிகர் சிவக்குமார், அவரது மனைவி … Read more

ஹிந்து வெறுப்பை கண்டித்து அமெரிக்காவில் தீர்மானம்| Resolution against Hindu hatred in America

வாஷிங்டன்,ஹிந்து வெறுப்புணர்வை கண்டித்து அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாண சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இந்தியர்கள், குறிப்பாக ஹிந்துக்கள் அதிகளவில் உள்ளனர். அமெரிக்க மாகாணங்களிலேயே முதல் முறையாக இங்கு, ஹிந்து வெறுப்பைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:உலகெங்கும், ௧௦௦க்கும் மேற்பட்ட நாடுகளில், 120 கோடிக்கும் மேற்பட்டோர் பின்பற்றும், உலகின் மிகப் பெரிய மற்றும் பழமையான மதமாக ஹிந்து மதம் உள்ளது. தனிமனித ஒழுக்கத்தை பின்பற்றுவது, பரஸ்பரம் மற்றவரை மதித்தல், அமைதி ஆகியவை ஹிந்து மதத்தின் அடிப்படையாகும்.மருத்துவம், அறிவியல், … Read more

விஜய் சேதுபதியின் முதல் தமிழ் வெப் சீரிஸ்… அதிரடியாக இணைந்த சூப்பர் கூட்டணி… ஷூட்டிங் ஆரம்பம்!

மதுரை: விஜய் சேதுபதி நடித்துள்ள விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனிடையே மேலும் பல படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, புதிதாக வெப் சீரிஸில் கமிட் ஆகியுள்ளார். சமீபத்தில் தான் அவர் இந்தியில் நடித்த ஃபார்ஸி வெப் சீரிஸ் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில், விஜய் சேதுபதி நடிக்கும் முதல் தமிழ் வெப் சீரிஸ்ஸின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. வெப் சீரிஸில் விஜய் சேதுபதி தமிழில் மட்டும் … Read more

பட்டியாலா சிறையில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து இன்று விடுதலை

சண்டிகர், முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், குர்ணாம்சிங் என்பவருக்கும் இடையே வாகனம் நிறுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில், நவ்ஜோத் சிங் சித்து நடத்திய தாக்குதலில், படுகாயமடைந்த குர்ணாம்சிங் உயிரிழந்தார். கடந்த 1988 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கில், நவ்ஜோத் சிங் சித்துவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியானா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து நவ்ஜோத் … Read more

ஐபிஎல் 2023: லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு…!

லக்னோ, 16-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி நேற்று கோலாகலமாக தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி குஜராத் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து ஐபிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் ஆடி வருகின்றன. இந்நிலையில் இன்றைய 2வது லீக் ஆட்டத்தில் லக்னோ-டெல்லி அணிகள் ஆட உள்ளன. ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் … Read more

அமெரிக்காவில் சக்தி வாய்ந்த சூறாவளியில் சிக்கி 3 பேர் பலி, 50 பேர் காயம்

வாஷிங்டன், அமெரிக்காவின் மத்திய பகுதியில் சக்தி வாய்ந்த சூறாவளி நேற்று தாக்கியது. இதில், பல்வேறு பகுதிகளிலும் இருந்த வீடுகள் சூறையாடப்பட்டன. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதுபற்றி புலாஸ்கி கவுன்டி பகுதியை சேர்ந்த பிரதிநிதி மேடலின் ராபர்ட்ஸ் என்பவர் சி.என்.என். செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, நேற்று மதியம் கடுமையாக தாக்கிய சூறாவளியால், அர்கான்சாஸ் மாகாணத்தின் நார்த் லிட்டில் ராக் பகுதியில் முதல் நபர் பலியானார். அந்த பகுதியில் 50 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். பலர் பாதிப்படைத்து இருக்க … Read more