பாகுபலித் தோற்றத்தில் காட்சி அளிக்கும் எடப்பாடி பழனிசாமி.! வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்.!!

பல போராட்டங்களுக்கு பிறகு அதிமுகவின் எட்டாவது பொது செயலாளராக போட்டியில்லாமல் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியை பெரிதும் வரவேற்ற அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், மேளதாளத்துடன் நடனமாடியும் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விளாங்குறிச்சி பகுதியில் அதிமுகவினர் “பாகுபலி” கெட்டப்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பேனர் வைத்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். அந்த பேனரில் பாகுபலி திரைப்படத்தில் நடித்துள்ள பிரபாஸ் வேடத்தில் எடப்பாடி நிற்பது போன்றுள்ளது.  மேலும், … Read more

காரைக்கால் கைலாசநாதர் கோயிலின் சாமி ஊர்வலத்தை 10 நாட்களும் நடத்த ஐகோர்ட் உத்தரவு

சென்னை: காரைக்கால் கைலாசநாதர் கோயிலின் சாமி ஊர்வலத்தை திருவிழாவின் அனைத்து நாட்களிலும் நடத்த உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், தடுப்பவர்கள் மீது எவ்வித இரக்கமும் காட்டாமல் நடவடிக்கை எடுக்க புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் காரைக்காலில் உள்ள ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவில், பத்து நாட்களும் ஸ்ரீ சோமாஸ்கந்தர், ஸ்ரீ உமையாம்பிகை, ஸ்ரீ கந்தர் சிலைகளை ஒரே வாகனத்தில் வைத்து கோயிலைச் சுற்றி, உலா வருவது வழக்கம். இது தொடர்பாக … Read more

ம.பி.கோயில் கிணறு இடிந்து விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரிப்பு

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பழமையான பாலேஷ்வர் மகாதேவ் கோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் சுமார் 40 அடி ஆழமுள்ள பழங்கால கிணறு உள்ளது. கான்கிரீட் சிலாப் கொண்டு இந்த கிணறு மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் ராம நவமியை முன்னிட்டு இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது கிணறு மூடப்பட்டுள்ள கான்கிரீட் சிலாப் மீது யாகம் நடைபெற்றது. அதைச்சுற்றி ஏராளமான பக்தர்கள் அமர்ந்தபடி பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீ ரென அந்த சிலாப் … Read more

தைவான் வான் பரப்பிற்குள் ஊடுருவிய சீன போர் விமானங்கள்…

சீன ராணுவத்திற்கு சொந்தமான 10 போர் விமானங்கள் தங்கள் வான் பரப்பிற்குள் அத்துமீறி ஊடுருவியதாக தைவான் தெரிவித்துள்ளது. தீவு நாடான தைவானை தங்கள் நாட்டின் ஒரு அங்கம் என சீனா உரிமை கோரிவருகிறது. இந்நிலையில், தைவான் அதிபர் சாய் இங் வென், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை(Kevin McCarthy) சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், அந்த சந்திப்பு நிகழ்ந்தால், தைவான் கடும் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீனா எச்சரித்துள்ளது. கடந்த 24 மணி … Read more

What to watch on Theatre & OTT: விடுதலை, பத்து தல – இந்த வாரம் என்னென்ன படங்கள் பார்க்கலாம்?!

பத்து தல (தமிழ்) பத்து தல ஒபேலி.என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக், பிரியா பவானிசங்கர், ரெடின் கிங்ஸ்லீ, டிஜே அருணாச்சலம், கலையரசன், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்து தல’. கன்னடத்தில் மிகப்பெரிய ஹிட்டான ‘மஃப்டி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்தான் இப்படம். இது மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விடுதலை (தமிழ்) ‘விடுதலை’ படத்தில் சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் … Read more

பல் பிடுங்கி சஸ்பெண்ட் ஆன ஏஎஸ்பி பல்வீர்சிங்கிற்கு ஆதரவாக `பேனர்’ வைத்த கிராம மக்கள்

நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி ஆக இருந்தவர் பல்வீர்சிங். இவர் மீது குற்ற வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராக வந்தவர்களின் பற்களை பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் ஏஎஸ்பி பல்வீர்சிங் அம்பாசமுத்திரம் சரகத்தில் இருந்தபோது அவர் செய்த சாதனைகள், அப்பகுதியில் குற்றச் சம்பவங்கள் குறைந்திருப்பது குறித்த தகவல்கள் வாட்ஸ்அப்பில் வைரலானது. மேலும் சட்டம், ஒழுங்கை பராமரிப்பதற்காக சிசிடிவி கேமராக்கள் அமைக்க முயற்சி எடுத்தது ஆகியவையும் சமூக வலைதளங்களில் வைரலானது. பொட்டல் கிராமம், சுப்பிரமணியபுரம் பகுதியை … Read more

இந்தியா, இலங்கை இடையே குறைந்த தூர பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை: அமைச்சர் ஏ.வ.வேலு பேச்சு

சென்னை: இந்தியா, இலங்கை இடையே குறைந்த தூர பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரவையில் அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார். ராமேஸ்வரம் – தலைமன்னார் (50 கி.மீ.) ராமேஸ்வரம் – காங்கேசன்துறை (100 கி.மீ) ஆகிய வழித்தடங்களில் கப்பல் போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கடல்சார் பாதசாரிகள் பாலம் 2024ல் நிறைவுறும் என்றும் அமைச்சர் கூறினார்.

டெல்லியில் இளம்பெண் காரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

டெல்லி: டெல்லியில் இளம்பெண் காரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேர் மீது 800 பக்க குற்றப்பத்திரிகை ரோகிணி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீது ஏப்ரல் 13ல் பரிசீலனை செய்யப்படும் என்று ரோகிணி நீதிமன்றம் கூறியுள்ளது. டெல்லியில் ஆங்கில புத்தாண்டு அன்று அஞ்சலி என்ற இளம்பெண் கார் மோதிய விபத்தில் உயிரிழந்தார்.

ராமேஸ்வரம் -இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து! சட்டசபையில் அமைச்சர் எவ வேலு அளித்த உறுதி!

Tamilnadu oi-Arsath Kan சென்னை: ராமேஸ்வரம்-தலைமன்னார் (50 கி.மீ), ராமேஸ்வரம்-காங்கேசந்துறை (100 கி.மீ) ஆகிய வழித்தடங்களில் கப்பல் போக்குவரத்தினை இயக்க ஒரு விரிவான திட்ட அறிக்கை மற்றும் மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எவ வேலு அறிவித்துள்ளார். மேலும், கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி 5 லட்சம் மரக்கன்றுகள் சாலையோரம் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். இது தொடர்பாக அமைச்சர் எவ வேலு தமிழக சட்டசபையில் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் … Read more