தானியங்கி மது விற்பனையை தடை செய்ய ஐகோர்ட் மறுப்பு… அரசின் வாதம் இதுதான்..!

தமிழ்நாட்டில் மது விற்பனையை மேலும் எளிதாக்க எந்திரம் மூலம் சென்னையில் தானியங்கி மது விற்பனை அறிமுகமாகியுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இந்த விவகாரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாசுக்கு, மதுவிலக்கு அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும்

முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார். இதற்கு மத்தியில், தானியங்கி இயந்திரங்கள் மூலம் மது விற்பனையை தடை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், மதுவால் நாட்டில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடக்கிறது. தமிழகத்தில் சமீப நாட்களாக பெண்களும் மது அருந்துவது அதிகரித்துள்ளது கவலை அளிக்கிறது. ” தமிழக அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் புதுச்சேரி இந்திராகாந்தி மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில், 15 முதல் 17 வயதுடைய பள்ளி மாணவர்கள் 50% பேர் மது அருந்தியுள்ளது தெரிய வந்துள்ளது. இதுபோல், பள்ளி மாணவர்களுக்கு மதுபானம் விற்கும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு எதிராக வழக்கு பதிந்து, குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க உத்தரவிட வேண்டும்.

சென்னையில் மொத்தம் 4 இடங்களில் தானியங்கி மது விற்பனை எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 800 இடங்களில் இந்த இயந்திரங்களை அமைக்கப்படவுள்ளது. இதனால் மாணவர்கள் பலருக்கு எளிதாக மது கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த எந்திரங்களை அமைக்க தடை விதிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ” தானியங்கி மது விற்பனை எந்திரங்கள் அனைத்தும் டாஸ்மாக் கடைக்குள் தான் அமைக்கப்பட்டுள்ளன. அதனால் 21 வயதுக்கு உட்பட்டவர்களால் மதுவை வாங்க முடியாது. மேலும், தானியங்கி மது வாங்க வருபவர்களை கண்காணிக்க ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மதுவை யார் வேண்டுமானாலும் வாங்கலாம் என்று பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வழக்கறிஞர் கூறினர். அரசு தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.