நடிகர் விஜய், தனது மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் உலக பட்டினி தினத்தில் அனைவருக்கும் உணவு வழங்கும் விதமாக `விலையில்லா விருந்தகம்’ என்ற முன்னெடுப்பைத் தொடங்கியதுமு விஜய் மக்கள் இயக்கம். இதனிடையே தமிழகத்தில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஊக்கதொகை வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை வரும் 17-ம் தேதி விஜய் நேரில் சந்திக்க உள்ளார் என்று விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் வரும் 17ம் தேதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சென்னை, நீலாங்கரையில் உள்ள R.K Convention Centre-ல் 2023ம் ஆண்டு நடந்து முடிந்த
தளபதி @actorvijay அவர்களின் சொல்லுக்கிணங்க,
• அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக @TVMIoffl ,
வருகின்ற (17-06-2023) சனிக்கிழமை அன்று சென்னை நீலாங்கரையில் உள்ள “RK Convention Centre-ல்” 2023-ஆம் ஆண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில்… pic.twitter.com/OCc1eiX6UV
— Bussy Anand (@BussyAnand) June 7, 2023
“10 மற்றும் 12-ஆம்” வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில் நடிகர் விஜய் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்க உள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.