அரசு வேலை கிடைத்ததால் அவாய்ட் செய்த காதலி… அடித்தே கொன்ற காதலன்… தட்டி தூக்கிய போலீஸ்!

மகாராஷ்டிரா மாநிலம் கோபர்கன் பகுதியை சேர்ந்தவர் 26 வயதான இளம் பெண் தர்ஷனா பவார். தர்ஷனாவும் அவருடைய உறவினரான ராகுல் ஹன்டோரும் சிறுவயது முதலே ஒன்றாக படித்து வளர்ந்து வந்துள்ளனர். டிகிரி முடித்ததுமே இருவரும் அரசுப்பணிக்கான தேர்வில் பங்கேற்க புனேவில் தங்கி தங்களை தயார்ப்படுத்தி வந்துள்ளனர்.

இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்தும் வந்துள்ளனர். இந்நிலையில் தர்ஷனா சமீபத்தில் மகாராஷ்டிர பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்கு தகுதி பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். மேலும் மாநில வனத்துறையில் கிளாஸ் 1 அதிகாரியாகவும் பணியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

புடவைக்கு அழகு சேர்க்கும் மகாலட்சுமி ரவீந்தர்… அசர வைக்கும் போட்டோஸ்!

அரசு வேலை கிடைத்த பிறகு தர்ஷனா, தனது காதலரான ராகுலுடன் பழகுவதையும் பேசுவதையும் தவிர்த்து வந்துள்ளார். மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராகுல் கேட்டதற்கும் மறுத்துள்ளார் தர்ஷனா. இதனால் கடுப்பான ராகுல், தர்ஷனாவை ராஜ்கர் கோட்டைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தர்ஷனாவை அடித்துக்கொலை செய்துள்ளார் ராகுல். முன்னதாக ராஜ்கர் கோட்டையில் கடந்த 18ஆம் தேதி தர்ஷனாவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. உடல் முழுக்க பலத்த காயங்களுடன் தர்ஷனாவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

நோ அசைவம்… நோ ஆல்கஹால்.. பைடனுடன் பச்ச தண்ணியில் மோடி சீயர்ஸ்… டீட்டோட்டலர்ஸ் என புகழ்ந்த கஸ்தூரி!

கடந்த 12 ஆம் தேதி சிங்கஹாத்தில் ட்ரெக்கிங் செல்வதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு ராகுலுடன் சென்றிருக்கிறார் தர்ஷனா. அன்றே தர்ஷனாவின் பெற்றோர் அவருக்கு போன் செய்துள்ளனர். ஆனால் காலை 10 மணிக்கு பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதையடுத்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர் குடும்பத்தினர். அப்போது ராகுலும் மாயமாகியிருப்பது தெரியவந்தது. பின்னர் தர்ஷனாவையும் ராகுலையும் காணவில்லை என போலீஸில் புகார அளித்தனர். அதன்பிறகு ராகுல் பக்கம் சந்தேகத்தை திருப்பிய போலீசார், தப்பியோட அந்தேரி ரயில் நிலையத்தில் காத்திருந்த ராகுலை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

திருப்பதி பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சி… 3 வயது சிறுவனுக்கு நடந்த கொடூரம்!

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்தான் இத்தனை தகவலையும் கூறியிருக்கிறார். ராகுலும் தர்ஷனாவும் பைக்கில் சென்ற சிசிடிவி காட்சி விசாரணைக்கு பெரும் உதவியாக இருந்துள்ளது. இருப்பினும் இருவரும் சென்ற அந்த பைக் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அரசுப்பணிக்கு தேர்வு செய்யப்பட்ட இளம்பெண் காதலனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.