திருப்பதி கோயிலுக்கு நாயுடன் சென்ற பக்தர்கள்.. தேவஸ்தானம் செய்த காரியத்தை பாருங்க!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாயுடன் வந்த பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகிகள் அனுமதி மறுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதிஉலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆந்திரா, தெலுங்கானா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பதி திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.​ 12 மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட்… 6 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை… கனமழையால் திணறும் கேரளா!​
திருப்பதியில் தடைஅந்த வகையில் திருமலைக்கு அசைவ உணவுகள், போதை பொருட்கள், மது பாட்டில்கள், சிகரெட், பீடி மற்றும் வேற்று மதத்தை விளம்பரப்படுத்தும் பொருட்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் ஆகியவை கொண்டுவர தடை செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் திருப்பதி திருமலையில் தேனீர் கடை நடத்தி வரும் நபர் ஒருவர், தேனீர் கப்புகளில் T என்ற எழுத்தை சிலுவை டிசைனில் பயன்படுத்தியது தெரியவந்தது.

​ நாடோடிகள் ஹீரோயினா இது… அடையாளமே தெரியாமல் மாறிப்போன அனன்யா!​வளர்ப்பு நாயுடன்இதனையறிந்த தேவஸ்தான நிர்வாகம் அந்த தேனீர் கடைக்கு சீல் வைத்தது. இதேபோல் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளையும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் தங்களுடன் கொண்டு வர தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கர்நாடகாவில் இருந்து வேனில் வந்த பக்தர்கள் சிலர் தங்களின் வளர்ப்பு நாயையும் தங்களுடன் வேனில் அழைத்து வந்தனர்.​ மகேஷ் பாபுவின் மகள் சித்தாராவா இவர்… பேரழகி… சூப்பர் ஹீரோயின் ரெடி!​
மடக்கிய அதிகாரிகள்அலிப்பிரி சோதனை சாவடியில் வாகனத்தை சரியாக சோதனை செய்யாததால் பக்தர்கள் தங்களுடன் நாயை மலைக்கு கொண்டு சென்றனர். திருமலையில் பக்தர்கள் நாயுடன் வந்ததைக் கண்ட அங்கிருந்த ஊழியர்கள உடனடியாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தேவஸ்தான அதிகாரிகள் வளர்ப்பு நாயுடன் வந்த பக்தர்களை மடக்கினர்.

​ சிதம்பரத்தில் அரங்கேறிய கொடூரம்… திருமணமான 2 மாதத்தில் கர்ப்பிணி மனைவியை பிளேடால் அறுத்து கொன்ற கணவன்!​அனுமதி மறுப்புமேலும் திருப்பதி மலைக்கு நாயுடன் வரக் கூடாது என்றும் அவர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் எச்சரித்தனர். அதுமட்டுமின்றி அந்த பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்காமல் வாகனத்துடன் திருப்பி அனுப்பினர். பக்தர்கள் எவ்வளவோ கெஞ்சியும் அவர்களை தேவஸ்தான அதிகாரிகள் தரிசனத்திற்கு அனுமதிக்கவில்லை. இதனால் கர்நாடகாவில் இருந்து திருப்பதி ஏழுமலையானை காண குடும்பமாக வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

​ திருப்பதிக்கு வந்தே பாரத் ரயில்… சென்னையில் இருந்து இனிமே எவ்ளோ நேரம் தெரியுமா?​தேவஸ்தானம் எச்சரிக்கைசோதனை சாவடியில் மெத்தனமாக இருந்து திருமலைக்கு நாயுடன் வந்த பக்தர்களை அனுமதித்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பதி திருமலையில் நடைபெறும் விபத்துக்களை தடுக்கும் வகையில் மலைபாதையில் செல்பி எடுக்க தேவஸ்தான நிர்வாகம் சமீபத்தில் தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.