தருமபுரி: பொது சிவில் சட்டம் தொடர்பான பிரதமர் மோடியின் பேச்சு சட்ட ஆணையத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இருப்பதாக தருமபுரியில் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று (ஜூலை 6) மாலை தருமபுரி வந்தார்.