மீண்டும் வந்த ஒர்க் ஃப்ரம் ஹோம்… பெய்ஜிங்கில் புதிய உத்தரவு… என்ன காரணம் தெரியுமா?

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
சர்வதேச அளவில் வெப்ப அலைகளின் தாக்கம் அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகளில் சராசரி வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் சீனாவும் அடங்கும். இந்நாட்டில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதுதான் விஷயம். வெளியில் தலைகாட்டினால் மண்டை பொளந்து விடும் போலிருப்பதாக அந்நாட்டு மக்கள் கூறுகின்றனர்.

சீன நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்த இலங்கை

பெய்ஜிங்கில் வாட்டி வதைக்கும் வெப்பநிலை

கடந்த 10 நாட்களாக பெய்ஜிங் நகரில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு அதிகமாக வெப்பநிலை பதிவாகி வந்துள்ளது. இவ்வளவு நாட்கள் தொடர்ச்சியாக வெப்ப அலைகள் தாக்குவது 1961ஆம் ஆண்டிற்கு பின்னர் இதுவே முதல்முறையாகும். சமீபத்தில் தான் மழை கொட்டி தீர்த்தது.

பியூட்டி பார்லர்களுக்கு தடை… பிழைப்பு போச்சு… தலிபான் உத்தரவால் பெரிய சிக்கலில் ஆப்கன் பெண்கள்!

ஜூலை சம்பவம்

சீனாவின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர். இதன் தொடர்ச்சியாக ஜூலை மாதத்தில் கடும் வெயிலை சந்திக்க வேண்டி வரும் என்று எச்சரிக்கப்பட்டது. அதன்படியே வானிலை தலைகீழாக மாறியுள்ளது. சராசரியாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறதாம்.

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இதனால் ஹீட் ஸ்டோக் (Heat Stoke) பிரச்சினை வர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதுமட்டுமின்றி பெய்ஜிங் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் நடப்பாண்டின் முதல் பாதியில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 4.1 நாட்கள் மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை வரும் என்று சீன வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

வெறும் ரூ.495 பேனா… அழியுற இங்க்… இதெல்லாம் நியாயமா ரிஷி சுனக்? பிரிட்டனில் வெடித்த பெரிய சர்ச்சை!

ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு

அதில் நடப்பு ஜூலை மாதம் உச்சம் தொட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் வெயிலின் தாக்கத்தில் இருந்து சமாளிக்கும் வண்ணம் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை அலுவலகம் வர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ரெட் அலர்ட்

வயதானவர்கள் பாதுகாப்பாக வீட்டிலிருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமிருக்கும் பகுதிகளில் ரெட் அலர்ட் விடப்பட்டிருக்கிறது. இது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அரசு துறைகள் உரிய முன்னேற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.