தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் ஜூலை 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அதிமுகவுக்கு ஏற்கெனவே அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் தமாகா, பாமகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகள் அணி திரண்டு வருகின்றன. பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த மாதம் பெங்களூரில் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
எதிர்கட்சிகள் அணியாய் ஒன்றுதிரண்டு வரும் நிலையில் பாஜக தனது தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வலிமையை காட்ட வேண்டும் என்று நினைக்கிறது. அந்த வகையில் தங்கள் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளை, இதற்கு முன் இடம்பெற்ற கட்சிகள் ஆகியவற்றை இணைத்து ஜூலை 18ஆம் தேதி டெல்லியில் கூட்டம் நடத்த உள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதிமுக – பாஜக இடையே உரசல்கள் இருந்து வந்த நிலையில் இரு கட்சிகளும் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திக்குமா, அல்லது பிரிந்து நிற்குமா என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால் பாஜக அழைப்பு விடுத்ததும், அதில் கலந்துகொள்ள எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம் ஆகியோர் கிளம்புவதும் இரு கட்சிகளின் கூட்டணியை உறுதிபடுத்தியுள்ளது.
ஆலோசனை கூட்டத்தில் இருக்கும் அரசியல் என்ன ?
அதேபோல்
ஏற்கெனவே அதிமுக-பாஜக கூட்டணியிலிருந்து விலகிய நிலையில் திமுக பக்கம் நகருமா என்ற கேள்வி எழுந்தது. ஒருவேளை பாமக திமுக கூட்டணியில் இணைந்தால் விசிக அந்த கூட்டணியிலிருந்து விலக நேரிடும் என்றும் பேசப்பட்டது. ஆனால் அந்த யூகங்களை எல்லாம் ஆரம்பத்திலேயே முறியடிக்கும் வகையில் டெல்லி ஆலோசனை கூட்டம் அமைந்துள்ளது.
பாமக சார்பில்
ராமதாஸும், தமாகா சார்பில் ஜிகே வாசனும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேமுதிகவுக்கு அழைப்புவிடுக்கப்பட்டதா என்பது குறித்தும் தகவல் இல்லை.
பாஜக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை என்று கூறியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.