Vairamuthu: வைரமுத்து வீட்டிற்கே சென்று பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முதல்வர்: சின்மயி குமுறல்

கவிப்பேரரசு வைரமுத்து இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

நயன்தாரா எனக்கு பெரிய முன் உதாரணம்
வைரமுத்துவின் வைர வரிகளை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வைரமுத்துவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

சென்னை பெசன்ட் நகரில் இருக்கும் வைரமுத்துவின் வீட்டிற்கே சென்று அவரை வாழ்த்தியிருக்கிறார். வைரமுத்துவுக்கு முதல்வர் பொன்னாடை போர்த்தி வாழ்த்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியிருக்கிறது.

வைரமுத்துவின் வீட்டில் முதல்வர் இருக்கும் புகைப்படத்தை பார்த்த பாடகி சின்மயி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என பல பெண்கள் புகார் தெரிவித்த மனிதருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க தமிழக முதல்வர் அவரின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். பல விருதுகள் வென்ற பாடகியும், டப்பிங் ஆர்டிஸ்டுமான நான் இந்த கவிஞர் பாலியல் தொல்லை கொடுத்ததை தெரிவித்ததற்காக கடந்த 2018ம் ஆண்டில் இருந்து எனக்கு தமிழ் திரையுலகில் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

சட்டப்படி நடமுறைகளே பெரிய தண்டனை என்பதால் 5 ஆண்டுகளாக போராடுகிறேன்.

பாலியல் தொல்லை கொடுப்பவர், கவிஞர் பல தலைமுறைகளுக்கு முன்பு பிறந்தார். அவர் எந்த பெண் மீதும் கை வைத்துவிட்டு தனக்கு பல அரசியல்வாதிகள் குறிப்பாக திமுகவை தெரியும் என கூறி அவர்களை அமைதியாக இருக்குமாறு மிரட்டுகிறார்.

அவருக்கு பல பத்ம விருதுகள், சாகித்ய நாடக் அகாடமி விருது மற்றும் பல தேசிய விருதுகள் கிடைத்திருக்கிறது.

இது தான் அவருக்கு இருக்கும் அதிகாரம். இதில் நானும், பிற பெண்களும் ஏன் முன்பே பேசவில்லை என்று கேட்கிறார்கள்.

பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரின் ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் அவரால் பாதிக்கப்பட்ட பெண்களை டேக் செய்து வயிறு எரியுதா என கேட்பதை தமிழ் பெண்ணியம் கலாச்சாரத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

பாலியல் தொல்லை கொடுத்தவர்களை கொண்டாடுவதும், பாதிக்கப்பட்ட பெண்களை கொடுமைப்படுத்துவதும் தான் நம் அருமையான Rape Apologist கலாச்சாரம்.

இது போன்ற ஆட்களை அரசியல்வாதிகள் காப்பாற்றுவார்கள் என்பதால் ப்ரிஜ் பூஷன், வைரமுத்து போன்றவர்கள் தப்பிவிடுவார்கள். இங்கு இல்லாத அதிசயமான நியாயம் கிடைக்க வேண்டும் என ஏன் விரும்ப வேண்டும் என்றார்.

சின்மயியின் ட்வீட்டை பார்த்த சிலர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் சிலரோ அவரை விமர்சித்திருப்பதுடன், கிண்டலும் செய்கிறார்கள்.

உங்களை யாரும் வைரமுத்துவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லுமாறு கேட்கவில்லை சின்மயி என கவிஞரின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

வைரமுத்துவால் நானும் பாதிக்கப்பட்டேன், எனக்கு நடந்தது வேறு யாருக்கும் நடக்கக் கூடாது: பாடகி புவனா சேஷன்

முன்னதாக வைரமுத்துவால் தானும் பாதிக்கப்பட்டதாக பாடகி புவனா சேஷன் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தனக்கு நடந்தது போன்று வேறு எந்த பெண்ணுக்கும் நடந்துவிடக் கூடாது என்று பேசுவதாக தெரிவித்தார் புவனா. மேலும் வைரமுத்துவுக்கு எதிராக தொடர்ந்து போராடும் சின்மயியின் தைரியத்தையும் அவர் பாராட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.