செம்மரக்கட்டை கடத்தல்… சிக்கிய 25 தமிழர்களின் நிலை என்ன? திருப்பதி அருகே அதிர்ச்சி!

செம்மரக்கட்டைகள் என்றாலே திருப்பதி அருகே உள்ள சேசாசலம் வனப்பகுதி தான் பலருக்கும் நினைவில் தோன்றும். விலை மதிப்புள்ள இந்த கட்டைகளை கடத்தி சென்று விற்க பல்வேறு கும்பல்கள் ரகசியமாக செயல்பட்டு வருகின்றன. இதற்கான பணிகளில் அப்பாவி தமிழர்கள் அதிகம் ஈடுபடுத்தப்படுவது வாடிக்கையாகி வருகிறது.

செம்மரம் கடத்தல்; 3 பேர் கைது; ஒருவர் எஸ்கேப்

திருப்பதி சேசாசலம் வனப்பகுதி

கடந்த 2015ஆம் ஆண்டு திருப்பதி சேசாசலம் வனப்பகுதியில் செம்மரக்கட்டை கடத்தல் சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த 20 பேர் தனிப்படை போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த தமிழகத்திற்கு வேதனையான செய்தியாக மாறியது. இந்நிலையில் தமிழர்களை பரபரப்பிற்கு ஆளாக்கியுள்ள ஒரு சம்பவம் இன்று நடந்துள்ளது.

செம்மரக்கட்டை கடத்தல் சம்பவம்

திருப்பதி அருகே செம்மரக்கட்டை கடத்தலை தடுக்க அதிரடிப்படை சார்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. இவர்கள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில் 25 தமிழர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இவர்கள் செம்மரக்கட்டைகளை வெட்டி லாரி மூலம் கடத்தி செல்ல முயற்சி செய்து கொண்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆந்திர போலீசார் அதிரடி

அப்போது சுற்றி வளைத்து தனிப்படை போலீசாரால் பிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 30 லட்ச ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தற்போது பிடிபட்ட 25 தமிழர்களையும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயமும் இருக்கிறது.

சிக்க வைக்கப்பட்டார்களா தமிழர்கள்?

மரம் வெட்ட வேண்டும் என்று கூறித் தான், ஒவ்வொரு முறையும் வனப்பகுதிக்குள் அழைத்து செல்லப்படுகின்றனர். ஆனால் கடைசி நேரத்தில் செம்மரக்கட்டைகளை வெட்ட வைத்து விடுவதாக பாதிக்கப்படும் நபர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுபோன்ற சம்பவம் தான் தற்போதும் நடந்துள்ளதா? என்று விசாரிக்கையில்,

அடர்ந்த வனப்பகுதியில் தமிழர்கள்

வனப்பகுதியின் வெளிப்பகுதியை ஒட்டிய இடங்களில் மரங்களை வெட்டினால் பிரச்சினையில்லை. போலீசாரின் கெடுபிடியில் இருந்து தப்பித்து கொள்ளலாம். அங்கு சாதாரண மரங்கள் மட்டும் தான் இருக்கின்றன. ஆனால் தற்போது சிக்கி கொண்ட 25 தமிழர்களும் அடர்ந்த வனப்பகுதியில் மரம் வெட்டி கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

போலீசார் அதிகாரப்பூர்வ தகவல்

ஒருவேளை முன்கூட்டியே விஷயத்தை சொல்லி செம்மரக்கட்டைகளை வெட்ட அழைத்து செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய விசாரணை நடத்தி ஊடகங்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடும் போது உண்மை நிலவரம் தெரியவரும் எனத் தெரிகிறது. அப்போது 25 தமிழர்களின் எந்தெந்த மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.