வார இறுதி நாட்கள்… சொந்த ஊருக்கு போறவங்களுக்கு 'ஸ்பெஷல்' அறிவிப்பு வெளியிட்ட போக்குவரத்துத்துறை!

வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது.

வெளியூர்கள்தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள், வேலை, தொழில், படிப்பு என சென்னையில் தங்கியுள்ளனர். இதேபோல் கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர், காஞ்சிபுரம் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மற்ற மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

​​விடுமுறை நாட்கள்தனியாகவும், குடும்பமாகவும் உள்ள இவர்கள் வார இறுதி நாட்கள், திருவிழாக்கள், பண்டிகை நாட்கள், விடுமுறை நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் என தங்களின் தேவைக்கு ஏற்ப சொந்த ஊருக்கு செல்கின்றனர். இதனால் வார இறுதி நாட்களில் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் முக்கிய பேருந்து நிலையங்களிலும் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழியும்.

​​சொந்த ஊர் செல்வார்கள்இதனைக் கருத்தில் கொண்டு வார இறுதி நாட்கள், முகூர்த்த நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் தமிழக அரசு கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்த வகையில் நாளை வாரத்தின் இறுதி நாள் என்பதாலும் அடுத்து சனி மற்றும் ஞாயிறுக்கிழமை இரண்டு நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதாலும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.​​
கூட்ட நெரிசல்இதனால் பயணிகளின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இந்த கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழகத்தில் வார இறுதி நாட்களில் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், நாளை தமிழகம் முழுவதும் கூடுதலாக 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாளை சிறப்பு பேருந்துகள்மேலும் இந்த சிறப்பு பேருந்துகள் வழக்கமான வழித்தடங்களில் இயக்கப்படும் என்றும் சென்னையில் இருந்து கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளும் மற்ற இடங்களில் இருந்து கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிறன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை வரும் மக்களுக்காக அனைத்து இடங்களிலும் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக போக்குவரத்துத்துறையின் இந்த அறிவிப்பு நாளை ஊருக்கு செல்லும் திட்டத்தில் இருப்பவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

​​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.