Maaveeran: விஜய் சேதுபதியுடன் நடிக்க காத்திருக்கிறேன்: 'மாவீரன்' சிவகார்த்திகேயன்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான படம் ‘மாவீரன்’. மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் இந்தப்படத்திற்காக சம்பளமே வாங்காமல் விஜய் சேதுபதி வாய்ஸ் கொடுத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ‘மாவீரன்’ படத்திற்கு விஜய் சேதுபதி வாய்ஸ் கொடுத்துள்ளது தொடர்பாக சிவகார்த்திகேயன் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘பிரின்ஸ்’ பட தோல்விக்கு பிறகு சிவகார்த்திகேயனின் கம்பேக் படமாக மாவீரனை கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். முன்னதாகவே தனது முந்தைய படத்தின் தோல்வியை ஒப்புக்கொண்டவர், மாவீரன் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்நிலையில் தான் பேண்டஸி ஜானரில் கடந்த வாரம் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது ‘மாவீரன்’.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அத்துடன் இந்தப்படத்திற்கு பல தரப்பிலிருந்தும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. சிவகார்த்திகேயன் இந்தப்படத்தில் வித்தியாசமான நடிப்பை வழங்கியுள்ளதாகவும் ரசிகர்கள் பாராட்டி தள்ளி வருகின்றனர். ‘மண்டேலா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.

மேலும் இயக்குனர் மிஷ்கின் வில்லனாக மிரட்டியுள்ள இந்தப்படத்தில் சரிதா, யோகி பாபு, சுனில் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். ‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அசரீரி குரல் ஒன்று கேட்கிறது. அந்த குரலின் பேச்சை கேட்டு கோழையாக இருக்கும் சிவகார்த்திகேயன் எப்படி மாவீரனாக மாறுகிறார் என்பதே படத்தின் கதை. இதற்காக விஜய் சேதுபதி குரல் கொடுத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

Leo: இன்னும் இதுமட்டும் தான் பாக்கி: அடேங்கப்பா.. ‘லியோ’ படக்குழுவின் பக்காவான பிளான்.!

மேலும், இதற்காக சம்பளமே வாங்காமல் வாய்ஸ் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் ரஜினி – கமல், அஜித் – விஜய், சிம்பு – தனுஷ் வரிசையில் விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயனை போட்டியாக ரசிகர்கள் கருதினர். இந்நிலையில் சிவகார்த்திகேயன் படத்தில் விஜய் சேதுபதி சம்பளம் வாங்காமல் ஈகோ இல்லாமல் வாய்ஸ் கொடுத்துள்ளார்.

இதுக்குறித்து பேசியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன், ‘மாவீரன் படத்தில் குரல் கொடுப்பதற்கு சம்பளம் வேணாம் என ஸ்ட்ரிக்டாக கூறிவிட்டு இரண்டு நாட்கள் வந்து டப்பிங் பேசி கொடுத்தார் விஜய் சேதுபதி. அவரது குரல் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். மாவீரன் படத்தில் அவரின் குரல் வரும் போதெல்லாம் திரையரங்கில் நல்ல வரவேற்பு கிடைத்தது. விஜய் சேதுபதியின் குரலும் நானும் இணைந்துவிட்டோம். நானும் அவரும் சேர்ந்து நடிக்க காத்திருக்கிறேன்’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Thalaivar 171: ரஜினியை இயக்குவதை உறுதி செய்த லோகேஷ்.. குஷியில் தலைவர் பேன்ஸ்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.