முடங்கும் தெலுங்கானா… கொட்டும் பேய் மழை.. ரெட் அலர்ட்… நாளையும் விடுமுறை!

தெலுங்கானா மாநிலத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நாளையும் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழைதென்மேற்கு பருவமழை வட மாநிலங்களை புரட்டி போட்டு வருகிறது. ஹிமாச்சல், உத்தரகாண்ட், ஒடிசா, பீகார், குஜராத், ராஜஸ்தான், டெல்லி, சண்டிகர், உத்தரப்பிரதேசம் என பல்வேறு மாநிலங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. இதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்திலும் கனமழை கொட்டி வருகிறது.
​ நாகப்பட்டினம் டூ இலங்கை.. கப்பல்லயே போகலாம்.. மோடி போட்ட ஒப்பந்தம்!​நிலச்சரிவுவட மாநிலங்களில் மட்டும் கனமழைக்கு இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளார். நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளனர். ஹிமாச்சல், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கனமழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
​ இலங்கை – இந்தியா இடையே கையெழுத்தான 4 சூப்பர் ஒப்பந்தங்கள்: மாற்றத்திற்கான தொடக்கம்!​தெலுங்கானாவில் பேய் மழைதொடர் கனமழையால் வடமாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தென்மேற்கு பருவமழை தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களின் பக்கம் திரும்பியுள்ளது. கனமழை காரணமாக தெலுங்கானாவில் நேற்றும் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
​ எதிர்க்கட்சிகள் கடும் அமளி.. மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க தயார்… மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!​விடுமுறை நீட்டிப்புஇந்நிலையில் கனமழை நீடிப்பதால் தெலுங்கானாவில் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கும் சனிக்கிழமை வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஹைத்ராபாத்தில் உள்ள தனியார் நிறுவனங்களும் விடுமுறையை உறுதி செய்யுமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், நகரத்தில் உள்ள பல முக்கிய சாலைகள், சுரங்கப்பாதைகள் மற்றும் குடியிருப்பு காலனிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.அடுத்த 4 நாட்கள்வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கரீம்நகர், ஸ்ரீகாகுளம் ஆகிய பகுதிகளில் சாலைகளில் கரைபுரண்டோடும் வெள்ளத்தில் அப்பகுதி மக்கள் மீன்களை பிடிக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளது. இதனிடையே வங்கக்கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நாளை ரெட் அலர்ட்தெலுங்கானா மாநிலத்திற்கு நாளை ரெட் அலர்ட் விடுத்துள்ள இந்திய வானிலை மையம், சனிக்கிழமைக்கு பிறகு, வரும் 26 ஆம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோமரம் பீம் அஸிஃபாபாத், மஞ்சேரியல், நிர்மல், நிஸாமாபாத் ஆகிய பகுதிகளில் நாளை மிக கன மழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.​சாலையில் மீன்பிடிக்கும் மக்கள்​​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.