இதென்ன ஜப்பானுக்கு வந்த சோதனை? அதுவும் 14 வருஷமா… நொந்து நூடுல்ஸ் ஆன அரசு!

ஜப்பான் நாட்டில் மொத்தம் 47 மாகாணங்கள் இருக்கின்றன. இவை அனைத்திலும் மக்கள்தொகை சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு வெறும் 8 லட்சம் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. இது அந்நாட்டு அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. பிறப்பு விகிதம் குறைந்து காணப்பட்டால் போதிய அளவில் மனித வளம் உருவாகாது.

மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை… அவசர நிலையை அறிவித்த ஜப்பான்!

ஜப்பான் மக்கள்தொகை

இதனால் அனைத்து துறைகளும் ஆட்டம் காணும் எனச் சொல்லப்படுகிறது. மேலும் ஜப்பான் நாட்டின் சமூக, பொருளாதார, நலத்திட்ட விஷயங்களில் சிக்கல்கள் உண்டாகும். பல்வேறு வளர்ந்த நாடுகள் பிறப்பு விகிதத்தில் சரிவை சந்தித்தாலும், ஜப்பானிற்கு பலத்த அடியாக அமைந்துள்ளது. ஏனெனில் தொடர்ந்து 14 ஆண்டுகளாக சரிவு முகமாக காணப்படுகிறது.

சவுதி அரேபியாவில் ஆசிரியராக சூப்பர் சான்ஸ்… இன்னும் 6 நாட்கள் தான் டைம்!

உள்துறை அமைச்சகம் வெளியீடு

கடந்த ஆண்டு மக்கள்தொகை விவரங்கள் தொடர்பாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. அதில், 2021ஐ காட்டிலும் 2022ஆம் ஆண்டு 0.65 சதவீதம் மக்கள்தொகை சரிந்துள்ளது. இது கடந்த 1968ஆம் ஆண்டிற்கு பிறகான மிகப்பெரிய வீழ்ச்சி என்பது பெரிதும் கவலை அளிக்கிறது. அதேசமயம் ஜப்பானில் வசிக்கும் வெளிநாட்டு மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

குடியேறும் வெளிநாட்டு மக்கள்

10.7 சதவீதம் அதிகரித்து 2,993,839ஆக இருக்கிறது. இது கடந்த 2013ஆம் ஆண்டிற்கு பின்னர் முதல்முறை அடைந்த முன்னேற்றம் என்பது ஆச்சரியமளிக்கிறது. இதன் பின்னணி சற்றே சுவாரஸியமானது. வெளிநாட்டில் இருந்து ஜப்பானில் குடியேறும் விஷயத்தில் மிகவும் கண்டிப்பான நடைமுறையை அந்நாட்டு அரசு பின்பற்றி வந்தது.

வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை

இதற்கிடையில் விதிமுறைகளில் சிறிய அளவிலான தளர்வுகளை அளித்து கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் ஜப்பானில் வேலை செய்வதற்கு போதிய ஆட்கள் இல்லை. இந்த பற்றாக்குறையை சமாளிக்கவே வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டன. இது அதிகப்படியானோர் வருவதற்கு கதவுகளை திறந்து விட்டிருப்பதை பார்க்க முடிகிறது.

கிரீஸ் தீவிற்கு சென்ற சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம்… என்னமா எரியுது காட்டுத்தீ!

முதியவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

மேலும் நீண்ட ஆயுள் காரணமாக ஜப்பானில் வயது முதிர்ந்த மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் பார்க்கும் போது இந்த எண்ணிக்கையில் உலகிலேயே இரண்டாவது இடத்தில் ஜப்பான் உள்ளது. எனவே அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டியிருக்கிறது.

புதிய திட்டத்தில் ஜப்பான் அரசு

தற்போது பல்வேறு துறைகளில் போதிய எண்ணிக்கையில் ஆட்கள் இல்லாததால் பெண்கள் மற்றும் முதியவர்களை பயன்படுத்தி கொள்ள அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கேற்ப பணிச்சூழல், வேலை நேரம் உள்ளிட்டவற்றை மாற்றி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜப்பானின் நிலை இந்த அளவிற்கு செல்லும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.