மாதம் ரூ 1000 இல்ல, இனி ரூ 1200: வெளியானது அரசாணை.. ஆனா இது மட்டும் இடிக்குது!

தமிழக அமைச்சரவையில் முதியோர் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க முடிவு செயப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் ஜூலை 22ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள்குறித்து முக்கிய முடிவெடுக்கப்பட்டன. இந்நிலையில் முதியோர் ஓய்வூதியத் தொகையை உயர்த்துவது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு ஏழை, எளிய மக்ககளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களின் கீழ், பயனாளிகளுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.1,000/- வழங்கப்பட்டு வந்தது. இந்த ஓய்வூதியத்தை ரூ.1,200/- ஆக உயர்த்தி வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 22 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கீழ்க்கண்ட சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் காத்திருப்புப் பட்டியலிலுள்ள 68,607 நபர்கள் (உழவர் பாதுகாப்புத் திட்டம் நீங்கலாக) மற்றும் ஏற்கெனவே பயன்பெற்று வரும் பயனாளிகளின் மாத ஓய்வூதியத்தை (மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம் தவிர) ரூ.1,000/- லிருந்து ரூ.1,200/- ஆக ஆகஸ்ட், 2023 முதல் உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம்இந்திராகாந்தி விதவையர் ஓய்வூதிய தேசியத் திட்டம்ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியத் திட்டம்ஆதரவற்ற / கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம்50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம்இலங்கை அகதிகளுக்கான (முதியோர், ஆதரவற்ற விதவைகள், ஆதரவற்ற கணவரால் கைவிடப்பட்ட பெண்கள்,) ஓய்வூதியத் திட்டம்

ஆகிய திட்டங்களின் மூலம் மாதம் 1000 ரூபாய் பெற்றுவந்தவர்கள் இனி மாதம் 1200 ரூபாய் பெறுவார்கள். இது பயனாளிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதேசமயம் இந்த திட்டங்களின் பயனாளிகளும், இந்த பயனாளிகளின் குடும்பப் பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற முடியாது என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது.

கலைஞர் உரிமைத் தொகை திட்டம் விண்ணப்பம் செய்யும் முகாம்

மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட நீண்ட வழிகாட்டு நெறி முறையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

“முதியோர் ஓய்வூதியம் (OAP), விதவை ஓய்வூதியம், அமைப்பு சாராத் தொழிலாளர் நல வாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்பு திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள்” கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற தகுதி இல்லாதவர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனையை ரத்து செய்ய வலியுறுத்தி கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.