தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் திங்களன்று பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. பல கிலோமீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்ற வாகனங்களால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஹைதராபாத் மாநகர காவல்துறை இணை ஆணையர் ஸ்டீபன் ராகவேந்திரர் நேரடியாக களத்தில் இறங்கியும் போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசல் குறித்து ஆய்வு செய்த காவல்துறையினர் மழை காரணமாக ஹைதராபாத் நகரில் உள்ள ஐ.டி. நிறுவன ஊழியர்கள் […]
