அரசு அலுவலர்களுக்கு பறந்த உத்தரவு… மீண்டும் ஒருமுறை நினைவூட்டிய பள்ளிக்கல்வித் துறை!

தமிழில் பெயர் எழுதும் போது, இனிஷியல் என்று சொல்லப்படும் முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறை அமலில் இருக்கிறது. இதுதொடர்பாக அவ்வப்போது நினைவூட்டப்பட்டு வருகிறது. பொதுமக்களும் பொதுப் பயன்பாடுகளில் இந்த முறையை பின்பற்ற ஊக்குவிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை

இந்நிலையில் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் சார்பில் முக்கிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் அரசாணை எண் 140, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை நாள் 02.11.2021 மற்றும் அரசு கடித எண் 5669 தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை நாள் 15.06.2023 ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.

தமிழில் கையெழுத்து

அதாவது, தமிழ் ஆட்சி மொழியாக இருக்கும் தமிழகத்தில் அனைவரும் தமிழில் தான் கையெழுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் முதன்மையான நபர்களாக பார்க்கப்படுகின்றனர்.

அரசு அலுவலர்கள் கவனத்திற்கு

கையெழுத்து மட்டுமல்ல, இனிஷியல் என்று சொல்லப்படும் முன் எழுத்துகளையும் தமிழில் தான் குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பலமுறை அரசாணைகள் வெளியிடப்பட்டும் அரசு அலுவலர்கள் கூட முழுமையாக தமிழில் எழுதும் பழகத்திற்கு வரவில்லை.

Vellore Capital of Research Center என மாற வேண்டும்…! – முதலமைச்சர்

முதலமைச்சர் முதல் கடைநிலை ஊழியர் வரை

இந்த சூழலில் முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைத்து அரசு ஊழியர்களும் அனைத்து இடங்களிலும் தங்களின் பெயர்களை எழுதும் போதும், கையெழுத்திடும் போது முன்னெழுத்தையும் சேர்த்து தமிழில் எழுத வேண்டும் என மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்களும்

மேலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் தமிழில் பெயர் எழுதும் போது, அதன் முன்னெழுத்தை தமிழிலேயே எழுதும் நடைமுறையை கொண்டு வர வேண்டும். அதுமட்டுமின்றி மாணவர்களின் சான்றிதழை பெற்றோர் கையெழுத்திட்டு பெறும் போது முன்னெழுத்து மற்றும் கையெழுத்தை தமிழிலேயே இட வேண்டும்.

அனைத்து அரசு துறைகளிலும்

இவ்வாறு பள்ளி பருவத்திலேயே நடைமுறைப்படுத்துவதால் மாணவர்கள் மனதில் ஆழமாக பதிந்து விடும். இதுதவிர பொதுமக்கள் அதிகம் அணுகக்கூடிய மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், மின்சார வாரியம், போக்குவரத்து துறை, பத்திரப் பதிவுத் துறை, வருவாய்த் துறை,

வணிகவரித் துறை, சமூக நலத்துறை, காவல் நிலையம், உணவுப் பொருள் வழங்கல் துறை ஆகியவற்றில் பொதுமக்கள் பூர்த்தி செய்து அளிக்கும் விண்ணப்பங்களில் முன்னெழுத்து மற்றும் கையெழுத்து ஆகியவை தமிழில் இடம்பெற வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.