Gayathrie: ஸ்டாண்ட் அப் காமெடியனை காதலிக்கும் விஜய் சேதுபதி பட நடிகை

விஜய் சேதுபதியின் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் மூலம் பிரபலமானவர் காயத்ரி. ரம்மி, புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், துக்ளக் தர்பார், மாமனிதன் ஆகிய படங்களில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.

“கோவம் வந்துச்சு..அங்க இருந்து கதை வந்துச்சு” Aneethi Team Interview !
மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் ஃபஹத் ஃபாசிலின் மனைவியாக நடந்திருந்தார் காயத்ரி.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் காயத்ரியும், ஸ்டாண்ட் அப் காமெடியன் அரவிந்தும் காதலிப்பதாக பேசப்படுகிறது. அதற்கு காரணம் காயத்ரியின் இன்ஸ்டாகிராம் போஸ்ட். தான் அரவிந்துடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அவரின் குணத்தை பாராட்டியிருந்தார்.

அதை பார்த்த ரசிகர்களோ, நீங்கள் அரவிந்தை காதலிக்கிறீர்களா என்று கேட்டார்கள். ஆனால் அதற்கு காயத்ரி பதில் அளிக்கவில்லை. இந்நிலையில் காயத்ரியும், அரவிந்தும் காதலித்து வருவதாக அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார.

காயத்ரியின் காதல் குறித்து அறிந்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது, நல்ல நடிகை. இந்த காதல் திருமணமத்தில் முடியட்டும். அவருக்கு ஒரு பெரிய பிரேக் கிடைக்க வேண்டும்.

Tamannaah:உலகின் 5வது பெரிய வைர மோதிரம் வைத்திருக்கிறேனா?: என்னம்மா இப்படி சொல்லிட்டீங்க!

திறமைசாலியாக இருந்தும் முன்னணி நடிகையாக முடியாமல் இருக்கிறார். நம்பிக்கையுடன் இருங்க காயத்ரி, வெற்றி நிச்சயம் என தெரிவித்துள்ளனர்.

காயத்ரி நடிப்பில் கடைசியாக வெளியான படம் பகீரா. முன்னதாக விக்ரம் படத்தில் காயத்ரி நடித்தபோது அவரை ரசிகர்கள் எச்சரித்தார்கள். இந்த லோகேஷ் கனகராஜுக்கு யாராவது சேர்ந்து இருந்தால் பிடிக்காது. உங்களை நிச்சயம் போட்டுத்தள்ளிவிடுவார் என்றார்கள். அவர்கள் சொன்னது போன்றே விக்ரம் படத்தில் காயத்ரியை கொடூரமாக கொலை செய்யும் காட்சியை வைத்திருந்தார் லோகேஷ் கனகராஜ்.

அதை பார்த்த ரசிகர்களோ, நாங்கள் தான் அப்பொழுதே சொன்னோம் அல்லவா. நாங்கள் சொன்னது மாதிரியே நடந்துவிட்டது. உங்களை படத்தில் கொலை செய்துவிட்டார் லோகி. அவருக்கு காதலே பிடிக்காது என்றார்கள்.

லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்டோரை வைத்து லியோ படத்தை எடுத்து வருகிறார். அந்த படத்தில் கண்டிப்பாக த்ரிஷாவை கொலை செய்துவிடுவார் என ரசிகர்கள் சத்தியமே செய்கிறார்கள்.

இதற்கிடையே காயத்ரியை விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். முன்பெல்லாம் ஒரு நடிகைக்கு திருமணம் நடந்தால் அவரின் கெரியர் பாதிக்கப்பட்டும். தொடர்ந்து ஹீரோயினாக நடிக்க முடியாது. ஆனால் தற்போது அந்த டிரெண்ட் மாறிவிட்டது.

தாயானாலும் தொடர்ந்து ஹீரோயினாக நடிக்கலாம் என்கிற புது டிரெண்ட் வந்துவிட்டது. அதனால் காயத்ரி திருமணம் செய்து கொண்டாலும் அவரின் கெரியர் பாதிக்கப்படாது.

இரட்டைக் குழந்தைகளுக்கு தாயான பிறகும் நயன்தாரா தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வருகிறார். தாயான பிறகு பாலிவுட்டில் அறிமுகமாகிறார். அதை பார்த்து பிற நடிகைகளுக்கு நம்பிக்கை வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.