பேட்ஸ்மென்கள் கூடுதல் பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் – தோல்வி குறித்து ஹர்திக் பாண்ட்யா கருத்து

கயானா,

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டு அணியுடன் 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது.

இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்தியாவை 4 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றிபெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி கயானாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 152 ரன்கள் எடுத்தது. 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 8.5 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் முன்னிலையில் உள்ளது.

2வது டி20 போட்டியில் தோல்வியடைந்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், எங்கள் பேட்டிங் திறனை முழுமையாக வெளிப்படுத்தவில்லை. விக்கெட்டுகள் தொடர்ச்சியாக விழுந்தன. நாங்கள் இன்னும் சிறப்பாக பேட்டிங் ஆடியிருக்கலாம். 160 அல்லது 170 ரன்கள் சிறந்த ரன்னாக இருந்திருக்கலாம். பேட்ஸ்மென்கள் கூடுதல் பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.