Rajinikanth: ஜெயிலர் எதிரொலி..ரஜினிக்கு கிடைத்த அட்வைஸ்..உஷாரான தலைவர்..!

ஜெயிலர் படத்தின் வெற்றி ஒருபக்கம் இருக்க இப்படம் வெளியாவதற்கு ஒருநாள் முன்னே ரஜினி இமயமலைக்கு சென்றுவிட்டார். நான்கு ஆண்டுகள் கழித்து இமயமலைக்கு செல்வதாகவும், ஜெயிலர் படம் எப்படி இருக்கு என ரசிகர்கள் பார்த்துவிட்டு சொல்வார்கள் என்றும் கூறிவிட்டு ரஜினி கிளம்பிவிட்டார். இதையடுத்து ஜெயிலர் படம் வெளியாகி மாஸ் ஹிட்டடித்துள்ள நிலையில் தற்போது ரஜினிக்கு ரசிகர்கள் அட்வைஸ் செய்துள்ளதாகவும், அந்த அட்வைஸை கேட்டு ரஜினி உஷாராகிவிட்டதாகவும் தகவல்கள் வருகின்றது.

அதாவது இணையத்தில் ரஜினியின் அதி தீவிர ரசிகர்கள் பலரும், தலைவா இந்த வெற்றியை பயன்படுத்தி தொடர் வெற்றிகளை குவித்து நீங்க யார் என காட்டுங்க என கூறி வருகின்றனர். சிலர் ஒருபடி மேலே சென்று ரஜினிக்கு அட்வைஸ் செய்தும் வருகின்றனர். அதாவது இனி வித்யாசமான கதைக்களங்களை கொண்ட படங்களை தேர்ந்தெடுக்குமாறும், புது புது இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்குமாறும் ரசிகர்கள் சிலர் கூறி வருகின்றனர்.

ஜெயிலர் வெற்றி

எப்படி கமல் விக்ரம் என்ற படத்தின் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்பி தற்போது ஷங்கர், மணிரத்னம், வினோத் என வித்யாசமான ஜானரில் படமெடுக்கும் இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளாரோ, அது போல ரஜினியும் செய்யவேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் விருப்பமாக இருக்கின்றது.

Jailer: ஜெயிலரை பாராட்டிய அரசியல் தலைவர்: இவர் பாராட்டுவார்னு சத்தியமா எதிர்பார்க்கல

ரஜினி தற்போது ஜெயிலர் படத்திற்கு பிறகு ஞானவேலின் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் லால் சலாம் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகின்றார் ரஜினி. இதுபோக ரஜினி தன் 171 ஆவது படத்திற்காக லோகேஷுடன் இணைய இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

இந்நிலையில் தற்போது ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் மிகவும் கவனம் செலுத்த இருக்கிறாராம். இந்த வெற்றியை பயன்படுத்தி தொடர் வெற்றிகளை குவித்து மீண்டும் தன்னை நிரூபிக்கும் முனைப்பில் தீவிரமாக இருந்து வருகின்றார் ரஜினி.

அட்வைஸ் செய்த ரசிகர்கள்

என்னதான் ரஜினி சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இல்லை என்றாலும், ரசிகர்கள் என்ன பேசுகின்றார்கள், அவர்களின் கருத்துக்கள் என்ன என்பது பற்றியெல்லாம் ரஜினி தெரிந்து வைத்திருப்பார். அவ்வாறு இல்லை என்றால் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக அவரால் சூப்பர்ஸ்டாராக இருக்க முடியாது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

எனவே ரசிகர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை புரிந்துகொண்டு செயல்படுவதே ரஜினியின் குறிக்கோளாகும். இந்நிலையில் ரசிகர்கள் தன்னிடம் என்ன எதிர்பார்க்கின்றார்கள் என்பதை தெரிந்துகொண்ட ரஜினி அதன்படி செயல்பட்டு அவர்களின் ஆசையை நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.