மக்களே, வெளுத்து வாங்கப் போகும் கனமழை: எந்தெந்த மாவட்டங்கள்? முழு விவரம்!

தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வந்த நிலையில் கனமழைக்கான அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது

இன்று வெளியான அந்த அறிவிப்பில், தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (ஆகஸ்ட் 21) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை ஆகஸ்ட் 22ஆம் தேதி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதுமட்டுமல்லாமல் நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் மற்றும் மதுரை என 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு புதுச்சேரி மாணவர்களுக்கு தமிழிசை எதிரி – முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்றைய தினம் அதிகபட்சமாக நம்பியூரில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கூடலூர் பஜாரில் 2 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 39.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.