சந்திரயான் 3: விக்ரம் லேண்டரில் வெளியே வந்தது ரோவர்… இனிமேதான் ஆட்டமே!

சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கியது. கடந்த 40 நாட்களாக நிலவை நோக்கி பயணித்து வந்த சந்திரயான் விண்கலம் இன்று தான் சேர வேண்டிய இடத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

இதனை தொடர்ந்து தரையிறங்கும் போது நிலவில் ஏற்பட்ட புழுதி அடங்கும் வரை சுமார் 4 மணி நேரம் ஓய்வெடுத்த விக்ரம் லேண்டர் தற்போது தான் சுமந்திருந்த பிரக்யான் ரோவரை வெளியிடும் புராசஸை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் லேண்டரின் சாய்வுதள கதவுகள் திறந்து ரோவர் பொறுமையாக வெளியே வரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பிரக்யான் ரோவர் முழுமையாக வெளியே வந்தபிறகு விக்ரம் லேண்டர் பிரக்யான் ரோவருடன் இருக்கும் புகைப்படங்களை எடுத்து இஸ்ரோவுக்கு அனுப்பும். இந்த ரோவர்தான் நிலவின் தென் துருவத்தில் உள்ள மண் மாதிரிகள் மற்றும் நீர் மூலக்கூறுகள் குறித்தும் ஆய்வு செய்யவுள்ளது.

நிலவில் அடுத்த 14 நாட்கள் ரோவர் மற்றும் லேண்டர் ஆய்வு பணியை மேற்கொள்ள உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.