குவைத் நாட்டில் நர்ஸ் வேலை… தேர்வு, இண்டர்வியூ எப்படி நடக்கும், யார் பொறுப்பு? அரசு வெளியிட்ட அறிவிப்பு!

குவைத் நாடு என்றாலே கை நிறைய சம்பளம் என்ற எண்ணம் தான் பலருக்கும் தோன்றும். குறிப்பாக இந்தியர்கள் மத்தியில் என்று சொல்லலாம். அதற்கு முக்கிய காரணம் அந்நாட்டு பணத்தின் மதிப்பு. உலகிலேயே மிகவும் வலிமையான பண மதிப்பை கொண்டிருக்கிறது. அமெரிக்க டாலரும், ஐரோப்பிய யூரோவும் குவைத்தின் தினாருக்கு பின்னால் என்பதை மறந்துவிட வேண்டாம். குறிப்பாக இந்திய ரூபாயில் கணக்கிட்டால் ஒரு தினார் என்பது சுமார் 270 ரூபாய்க்கு சமம்.

மகாநதி சுரங்க நிறுவனத்தில் வேலை?

குவைத்தில் வேலைவாய்ப்பு

எனவே தான் இந்தியாவில் இருந்து பலரும் வேலைக்காக குவைத் செல்கின்றனர். குவைத் நாட்டில் நர்ஸ் வேலைக்கு அதிகப்படியான ஆட்கள் தேவைப்படுகின்றனர். இதற்காக ஆசியாவின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் குவைத்தை நோக்கி கனவு கோட்டை கட்டி வருகின்றனர். இந்நிலையில் நர்ஸ் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவது தொடர்பாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

குவைத் டூ திருப்பதி… நான் ஸ்டாப்பா பறக்கப் போகுது… சீக்கிரமே புதிய விமான சேவை!

நர்ஸ் வேலை

அதில், கடந்த 2018ஆம் ஆண்டு வரை இடைத்தரகு நிறுவனங்கள் மூலம் நர்ஸ் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு, குவைத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அதன்பிறகு அத்தகைய நடவடிக்கைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. தற்போது இடைத்தரகு நிறுவனங்கள் உடன் எந்தவித தொடர்பும் இல்லை. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்களை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.

அரசு அறிவிப்பு

அதுமட்டுமின்றி, நர்ஸ் வேலைக்கு ஆட்கள் தேவைப்பட்டால் குவைத் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் மற்ற நாடுகளின் அரசு துறைகளுடன் இணைந்து நடவடிக்கைகளை முடுக்கி விடும். எனவே வெளிநாட்டினர் அவர்களது அரசை தொடர்பு கொண்டு விண்ணப்பிப்பதே சரியாக இருக்கும். சம்பந்தப்பட்ட அரசுகள் தான் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றை நடத்தும்.

அமீரக குடிமகன் ஆக வேண்டுமா? UAE கோல்டன் விசாவுக்கான ஜாக்பாட் சலுகைகள்!

எந்தெந்த நாடுகளில் ஆட்கள் தேவை

அவர்கள் தேர்வு செய்து அனுப்பும் பட்டியலை தான் குவைத் அரசு பரிசீலனை செய்து நர்ஸ் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும். சமீபத்தில் இரண்டு நாடுகளில் இருந்து நர்ஸ் வேலைக்கு ஆட்கள் எடுக்கப்பட்டன. அவை பாகிஸ்தான், ஜோர்டான். தற்போது இந்தோனேசியா, இலங்கை, துனிசியா ஆகிய நாடுகளில் இருந்து நர்ஸ் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போலி விளம்பரங்கள்

இவை சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசு துறைகள் மூலமே நடத்தப்படும். எனவே போலியான விளம்பரங்களை கண்டு பொதுமக்கள் யாரும் ஏமாற்றம் அடைந்துவிட வேண்டாம். ஒவ்வொரு விளம்பர அறிவிப்பின் உண்மைத் தன்மை மற்றும் தரவுகளை சரிபார்த்து விண்ணப்பிக்க வேண்டும். தேவையின்றி பணத்தை இழந்துவிடாதீர்கள் என்று குவைத் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.