மக்களே கொட்டப் போகும் கனமழை: மூன்று மாவட்ட மக்கள் உஷார் – வெளியான அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில் இன்று மூன்று மாவட்டங்களில்

பெய்யும் என்ற அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வேறு சில மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை (ஆகஸ்ட்25 ) முதல் வருகிற ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.