
‛அன்பே வா' தொடரில் என்ட்ரி கொடுத்த ஸ்ரீகோபிகா
அன்பே வா தொடரில் விராட், டெல்னா டேவிஸ், கன்யா பாரதி, மஹாலெட்சுமி, ஸ்வாதி தாரா உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த தொடர் இதற்கு முன்பே பலமுறை முடியபோவதாக செய்திகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும், கதையின் போக்கு பல்வேறு ட்விஸ்ட்டுகளுடன் சுவாரசியமாக தொடர்ந்து வருகிறது.
இந்த கதையில் மேலும் சுவாரசியத்தை கூட்டும் வகையில் 'கண்மணி' என்கிற புதிய கதாபாத்திரத்தில் ஸ்ரீகோபிகா நாயர் என்ட்ரி கொடுத்துள்ளார். சுந்தரி சீசன் 1 முடிவுக்கு பின் ஸ்ரீகோபிகா அன்போ வா தொடரில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். ஸ்வாதி தாராவின் என்ட்ரியை தொடர்ந்து இந்த புதிய ஹீரோயின் வருகையால் இன்னும் என்னென்ன ட்விஸ்ட்டுகள் கதைக்களத்தில் நிகழும் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து வருகின்றனர்.