
ரஞ்சிதமே தொடரில் வில்லன் என்ட்ரி கொடுக்கும் தருண் அப்பாசாமி
சின்னத்திரையில் டிவியில் ஒளிபரப்பாகும் ரஞ்சிதமே தொடரில் மனிஷாஜித், சதீஷ், ரூபாஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்த்திரத்தில் நடித்து வருகின்றனர். தற்போது இந்த தொடரில் ஈரமான ரோஜாவே தொடரின் மூலம் ஏற்கனவே மிகவும் பிரபலமான தருண் அப்பாசாமி முக்கிய ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த செய்தியை உறுதிபடுத்திய தருண் அப்பாசாமி, 'ரஞ்சிதமே தொடரில் சிவ் சதீஷ், மனிஷாஜித், ரூபா ஸ்ரீயுடன் இணைந்து பணி செய்வதில் ஆர்வமாக இருக்கிறேன். எனது இந்த முயற்சியில் உங்கள் அனைவரது ஆதரவையும் வேண்டுகிறேன்' என்று கூறியுள்ளார். இந்த தொடரில் ரவி என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் தருண் அப்பாசாமி எண்ட்ரி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.