சென்னை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளுக்குத் தமிழக அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளுக்கு தற்போது 2 ஆம் மாத தவணைத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு இது குறித்து வெளியிட்ட அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக அரசின் ஒவ்வொரு மக்கள் நலத்திட்டமும், தேவையுள்ள ஒருவர்கூட விடுபடாமல் தகுதியான […]