திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்ஹ்டை முன்னிட்டு வரும் 28. 29 தேதிகளில் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தமிழகத்தில் உள்ள முக்கிய ஆன்மிக தலங்களில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் ஒன்றாகும். தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி இந்த கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அப்படி வரும் பக்தர்கள் இங்குள்ள மகாதீபமலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம். வருகிற சனிக்கிழமை ஐப்பசி மாத பவுர்ணமி […]