சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தின விழா: ஆளுநர், காங்கிரஸ் கட்சியினர் மரியாதை

சென்னை: சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தின விழாவை முன்னிட்டு, அவரது உருவப் படத்துக்கு தமிழக ஆளுநர்,தமிழக காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 148-வது பிறந்த தினம்தேசிய ஒற்றுமை தினமாக நேற்றுநாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

இதை முன்னிட்டு, கிண்டி ராஜ்பவன் பிரதான நுழைவு வாயில் அருகே உள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், தேசிய ஒற்றுமை தின உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆளுநர் மாளிகை அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்ச்சியில், சர்தார் வல்லபாய் பட்டேலின் உருவப் படத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

இதேபோல், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தலைமையில் ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.