உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி நடைபெறும் பிட்ச் கொஞ்சம் கடினமாக இருக்கும் என்பதால் முதலில் பேட்டிங் விளையாடும் அணிக்கு சாதமாக இருக்கும் என கணிக்கப்பட்டது. அதன்படி டாஸ் வெற்றி பெறும் பேட்டிங் எடுக்கலாம் என்றும், 300 ரன்களுக்கும் மேல் அடிக்க முடியாது என்றும் கணிக்கப்பட்டது. இப்படியான சூழலில் டாஸ் இந்திய அணிக்கு சாதமாக விழுந்திருக்கிறது. டாஸ் வெற்றி பெற்ற கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதுவே இந்திய அணிக்கு இப்போது இப்போட்டியில் சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.
India won the toss & decided to bat first. pic.twitter.com/VA01Xszp1S
— Johns. (@CricCrazyJohns) November 5, 2023