கேதார்நாத் தற்போது குளிர்காலம் தொடங்கி உள்ளதால் கேதார்நாத் கோவில் நடை அடைக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற கேதார்நாத் ஆலயம் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது. கேதார்நாத் கோவில் முழுவதும் குளிர்காலத்தில் பனியால் சூழப்பட்டுவிடும் என்பதால் று மாதங்களுக்கு இந்த கோவில் நடை சாத்தப்படுவது வழக்கம். கடந்த சில நாட்களாக கேதார்நாத் கோவில் பகுதியில் பனிப்பொழிவு நிலவி வரும் சூழலில் கோவிலின் கதவுகள் அடைக்கப்பட்டு உள்ளது. அப்போது கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 2,300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, சிவபெருமானை வழிபட்டதாக […]
