'ஓபன்' ஆக வாய்ப்பு கேட்ட பாயல் ராஜ்புத்

தமிழ், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளவர் பாயல் ராஜ்புத். தமிழில் 'இருவர் உள்ளம்' என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது 'கோல்மால், ஏஞ்சல்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'மங்களவாரம்' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் 'காந்தாரா' பட இயக்குனர் ரிஷப் ஷெட்டியிடம் 'காந்தாரா சேப்டர் 1' படத்திற்காக ஓபன் ஆக எக்ஸ் தளத்தில் வாய்ப்பு கேட்டிருக்கிறார். “காந்தாரா சேப்டர் 1' படத்திற்கு ஆடிஷன்கள் நடைபெற்று வருகிறது என கேள்விப்பட்டேன். இந்த மதிப்பிற்குரிய படத்தில் பங்கு பெற ஆர்வமாக உள்ளேன். சமீபத்தில் வெளியான 'மங்களவாரம்' படத்தில் எனது நடிப்புக்கு குறிப்பிடத்தக்க பாராட்டுக்கள் கிடைத்தது. இப்படத்தைப் பார்க்க உங்களுக்கு நேரம் கிடைத்தால் மகிழ்வேன். ஆடிஷன் குறித்து ஆலோசனை வழங்கவும் கேட்டுக் கொள்கிறேன். எனது பதிவை மறுபதிவு செய்து இன்னும் முன்னெடுத்துச் செல்வதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பல மொழிகளிலும் நடித்த ஒரு நடிகை இப்படி ஓபன் ஆக வாய்ப்பு கேட்டிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.