நாடு திரும்பும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்தார்

தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்க்கி (ஓய்வு)  (டிசம்பர் 13) கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.

இப்பிரியாவிடை சந்திப்பின் போது, இரு பிராந்திய நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஆற்றிய பணியை பாதுகாப்பு செயலாளர் பாராட்டினார்.

இலங்கையின் கலாச்சாரம், அழகு மற்றும் அதன் மக்களின் விருந்தோம்பலை மேஜர் ஜெனரல் ஃபரூக் பெரிதும் பாராட்டினார். மேலும் பிராந்தியங்களில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை வளர்ப்பதில் இரு நாடுகளின் அர்ப்பணிப்பையும் அவர் எடுத்துரைத்தார்.

இச்சந்திப்பின் போது பாதுகாப்பு செயலாளர் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.

பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தம்மிக்க வெலகெதர மற்றும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் முஹம்மட் பாரூக் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.