ஹோட்டலில் ஹேர் டிரையர் பயன்படுத்திய பெண்ணுக்கு ரூ.1 லட்சம் அபராதம்… ஏன் தெரியுமா?

ஹோட்டலில் பெண் ஒருவர் ஹேர் டிரையர் பயன்படுத்தியதற்காக அவரிடமிருந்து 1.10 லட்ச ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் `நோவோடெல் பெர்த் லாங்க்லி’ என்ற ஹோட்டலில் கெல்லி என்ற பெண் தங்கியுள்ளார். அவர் தன்னுடன் கொண்டு சென்ற ஹேர் டிரையர் (Hair Dryer) மூலமாக தலையை உலர்த்தி உள்ளார்.

ஹேர் ட்ரையர் (சித்தரிப்பு படம்)

அப்போது ஹேர் டிரையர், ஃபயர் அலாரமை (Fire Alarm) தூண்ட, அலாரம் ஒலித்துள்ளது. அந்த இடத்திற்கு வேகமாக வந்த தீயணைப்பு குழுவினர், ஹேர் டிரையரால் அலாரம் ஒலிக்கப்பட்டதை அறிந்து அங்கிருந்து சென்று விட்டனர். இதோடு எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்த கெல்லிக்கு அப்போது தான் பிரச்னை தொடங்கியுள்ளது.

மூன்று நாள்களுக்குப் பிறகு, கெல்லியின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 1,10,000 ரூபாய் குறைந்துள்ளது. பொய்யான ஃபயர் அலாரமை எழுப்பியதற்காக அபராதமாக அவரது வங்கிக் கணக்கில் இருந்து இந்தத் தொகை பிடிக்கப்பட்டுள்ளது.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறையால் அமைக்கப்பட்ட பொய்யான அலாரங்களுக்கான அபராதத்தை விடக் கூடுதலாக வசூலித்துள்ளனர். 

Fire Man (Representational Image)

இவ்வளவு பெரிய தொகையை அபராதமாகக் கொடுக்க கெல்லி தயாராக இல்லை; ஹோட்டல் நிர்வாகத்தைத் தொடர்பு கொண்ட கெல்லி, `இந்தக் கொள்கை நியாயமானதா’ என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்தச் சம்பவம் ஊடக கவனத்தைப் பெற்ற பிறகு, இறுதியாக அவரது பணம் அவருக்குத் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல்களில் எதற்கெல்லாம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்… கமென்ட்டில் சொல்லுங்கள்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.