பொன்முடி இலாகா ராஜகண்ணப்பனிடம்… உயர்கல்வித்துறை அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டது எப்படி?!

2006-11 தி.மு.க ஆட்சி காலத்தில் உயர்கல்வி மற்றும் கனிமவளத் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக, 2011 அ.தி.மு.க ஆட்சியில் ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி இருவரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததோடு, இருவருக்கும் தலா 50 லட்சம் ரூபாய் அபாரதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

இதையடுத்து பொன்முடி வகித்து வந்த தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட உயர்கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் துறைகள் அமைச்சர் ராஜகண்ணப்பன்னுக்குக் கூடுதலாக ஒதுக்கி ஆளுநர் மாளிகைக்கு தமிழ்நாடு அரசு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

பொன்முடி

உயர்கல்வித்துறை அமைச்சராக ராஜகண்ணப்பன் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி மற்றும் தேர்வு செய்வதற்கு முன் என்னவெல்லாம் ஆலோசனைகள் செய்யப்பட்டது என்று விசாரித்தோம்.

“அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் தீர்ப்பு வந்தபோது முதலமைச்சர் டெல்லியில் இருந்தார். அப்போதே அவருக்கு இந்த வழக்கின் தீவிரம் குறித்துச் சொல்லப்பட்டது. இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம், பிரதமர் மோடியுடான சந்திப்புகளை முடித்துக்கொண்டு சென்னை வந்த முதல்வரிடம் சீனியர்கள், அமைச்சர்கள், வழக்கறிஞர்கள் தரப்பிலிருந்து வழக்கின் தீவிரமும் அதனால் பொன்முடியின் பதவியும் ஆபத்தில் இருப்பதையும் சுட்டிக்காட்டப்பட்டது. அதோடு இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் அமைச்சர் பொன்முடிக்கு விடுதலை கிடைக்கும் என்றும் வழக்கறிஞர்கள் விளக்கினார்களாம்.

அப்போது, இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், 2011 – 2015 காலத்தில் சட்டத்துறைச் செயலாளராக இருந்தவர் என்பதையும், அந்தக் காலக்கட்டத்தில்தான் பொன்முடி மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது என்பதையும், அதையடுத்து அவரது சொத்துக்களை முடக்க உத்தரவிடப்பட்டது என்பதையும் கூறினார்கள்.

ஆலோசனை நள்ளிரவு 12 மணி தாண்டியும் சென்றது. இதையடுத்து அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளதை எடுத்துக்காட்டினோம். ‘புதிதாக யாரையும் அமைச்சரவைக்குள் இணைக்க வேண்டாம். இருக்கும் ஒருவரிடம் கூடுதல் பொறுப்பாகக் கொடுத்துவிடுவோம்’ என முதல்வர் தரப்பிலிருந்து சொல்லியிருக்கிறார்கள்.” என்றனர் அறிவாலய சீனியர்கள்…

அமைச்சர் ராஜகண்ணப்பன் – முதல்வர்

“இரண்டு மூன்று அமைச்சர்களின் பெயர் ஆலோசனையில் இருந்தது. அதையடுத்து ராஜகண்ணப்பனின் பெயரை முதல்வர் தரப்புதான் தேர்வு செய்தது. காலையில் தூத்துக்குடி கிளம்பும் முன்பு அதற்கான பரிந்துரைக் கடிதத்தை தலைமைச் செயலாளருக்கு அனுப்பிவிட்டுத்தான் சென்றார்கள்” என முதல்நாள் நடந்த ஆலோசனை விவரங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.