கோன்டா ;உத்தர பிரதேசத்தின் கோன்டா மாவட்டத்தில் உள்ள பைரியாஹி கிராமத்தைச் சேர்ந்தவர் முஹமது ரஷீத். இவருக்கு, தரன்னும் என்பவருடன் திருமணம் நடந்தது.
குழந்தைகள் இல்லை என்பதால், ரஷீத் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தற்போது, துபாயில், அவர் வேலை செய்து வருகிறார்.
தரன்னுமின் சகோதரரின் சிறுநீரகம் செயலிழந்ததை அடுத்து, மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு, தன் சிறுநீரகத்தை தரன்னுமின் தானமாக வழங்கி உள்ளார். இந்த சம்பவம் நடந்து ஐந்து மாதங்களுக்கு பின் மாமியார் வீட்டிற்கு அவர் திரும்பினார்.
அப்போது, சிறுநீரகத்தை தானமாக வழங்கியது தொடர்பாக மாமியார், கணவர் மற்றும் தரன்னுமின் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கு இழப்பீடாக குடும்பத்தாரிடம் இருந்து, 40 லட்சம் ரூபாய் வாங்கி வரும்படி தரன்னுமின்னிடம், ரஷீத் கேட்டு உள்ளார். இதற்கு அவர் மறுக்கவே, துபாயில் இருந்தபடி வாட்ஸ் ஆப் வாயிலாக தரன்னுமின்னிடம் அவர் முத்தலாக் முறையில் விவாகரத்து அளித்துள்ளார்.
இதையடுத்து அந்த பெண், மாமியார் வீட்டிலிருந்து தாய் வீட்டுக்கு துரத்தி அடிக்கப்பட்டார். தரன்னுமின் புகார் அளித்ததை அடுத்து, இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முஸ்லிம் ஆண்கள், தங்கள் மனைவியை மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை இருந்தது. இதனால், அந்த
சமுதாய பெண்கள் பாதிக்கப்பட்டதை அடுத்து, 2019ல் முத்தலாக் தடை சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இதன் வாயிலாக, முத்தலாக் கூறி விவாகரத்து செய்வது சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement