தருமபுரி: தமிழக அரசு மழை நிவாரணப் பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
தருமபுரியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மண்டல நிர்வாகிகள் குழு கூட்டம் இன்று (டிச., 23) தருமபுரி ரோட்டரி அரங்கில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் பங்கேற்றார். முன்னதாக, செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியது: “வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆயத்த பணிகளை கடந்த மூன்று மாதங்களாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதியிலும் தமிழ் மாநில காங்கிரஸ் இடம்பெறும் கூட்டணிக்கு வலுசேர்க்கும் வகையில் இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.