S.J Suryah: "12 மணி நேரம் படம் குறித்து உரையாடிக் கொண்டிருந்தோம்"- LIC படம் குறித்து எஸ்.ஜே சூர்யா

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் வெளியான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் படம் எதுவும் இயக்கவில்லை. நடிகர் அஜித் குமாரை வைத்து படம் இயக்கப் போவதாகச் செய்திகள் வெளியானது.

ஆனால் அந்தப்  படம் கைவிட்டுப் போனது. இந்நிலையில் விக்னேஷ் சிவன், ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி ‘லவ் டுடே’ படம் மூலம் வெற்றி அடைந்த பிரதீப் ரங்கநாதனை வைத்துப் படத்தை இயக்கவிருக்கிறார்.

எஸ்.ஜே சூர்யா

இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ (LIC) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தில் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே சூர்யாவும் நடிக்கிறார். 

இதனிடையே இந்தப் படத்தைப் பற்றி எஸ். ஜே சூர்யா தன்னுடைய ‘X’ வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அதில், “ ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ என்னும் பெயர் எப்படி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறதோ, அதைவிடச் சிறப்பாக இந்தப் படம் இருக்கப்போகிறது.12 மணி நேரம் இப்படம் குறித்து உரையாடிக் கொண்டிருந்தோம். விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் உடன் அதில் கலந்து கொண்டது சிறந்த அனுபவத்தைக் கொடுத்தது. புதியதொரு காதல் உலகத்திற்கு அழைத்துச் செல்வதில் விக்னேஷ் சிவன் உறுதியாக இருக்கிறார்” என்று பதிவிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.