அயோத்தி இன்று பிரதமர் மோடி புதிய ரயில் சேவைகளைத் தொடங்கி வைத்துள்ளார் இன்று உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அவர் அப்போது 2 அம்ரித் பாரத் ரயில்கள் மற்றும் 6 புதிய வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்தார். அயோத்தி ரயில் நிலையத்தில் இருந்து, தர்பங்கா-டில்லி அம்ரித் பாரத் ரயில் மற்றும் அயோத்தி- ஆனந்த் விகார் (டில்லி) வந்தே பாரத் ரயில் ஆகிய ரயில்களைப் பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கிவைத்தார். இதர ரயில்களை காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார். அம்ரித் பாரத் ரயில்களின் வழித்தடம்: 1. தர்பங்கா (பீகார்)- ஆனந்த் விகார் (டில்லி). இந்த ரயில் அயோத்தி வழியாக இயக்கப்படுகிறது. 2. மால்டா டவுன் (மேற்கு வங்கம்) – பெங்களூரு விஷ்வேஷ்வரய்யா ரயில் நிலையம் (கர்நாடகா) […]
