திடீர் பஞ்சர்; கட்டுப்பாட்டை இழந்த கார்… ஒன்றரை வயது குழந்தை உட்பட மூவரை `பலி'கொண்ட கோர விபத்து!

ஆந்திர மாநிலம், தேவாரப்பள்ளி பகுதியிலுள்ள துடுகுரு தேசிய நெடுஞ்சாலையில் விஜயவாடாவிலிருந்து ராஜமுந்திரிக்குச் சென்றுகொண்டிருந்த காரின் டயர் திடீரென பஞ்சரானது. இதனால் நிலைதடுமாறிய கார், எதிர்புறச் சாலையில் பாய்ந்தது. அப்போது எதிர் திசையில் வந்த மற்றொரு கார்மீது மோதி, விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். இந்தக் கோர விபத்து குறித்து உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு தேவாரப்பள்ளி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதில் காயமடைந்தவர்களுக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், சிகிச்சைப் பலனளிக்காமல் 19 மாத குழந்தையான கனிஷ்கா உயிரிழந்தார். மற்றவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து காவல்துறை வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறது. இதே பகுதியில், இதற்கு முன்னர் 2013-ம் ஆண்டு மே மாதம் கார் டயர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.