அஸ்ஸாம் மாநிலம், உடல்குரி அருகே உள்ள ராங்க்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிஸ்வாந்த் முர்மோ (54). இவரின் மகன் சுபோல்முர்மோ (32). அதேபோல், அஸ்ஸாம் மாநிலம், பாக்ஷா மாவட்டம், தமுல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலோ ராம்கவல்(50). இவரின் மனைவி சின்தோமணிபோரோ(40). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து தனது இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார் சின்தோமணிபோரோ. இதேபோல், சுபோல்முர்மோ கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள மூலிமங்கலத்தில் செயல்பட்டு வரும் மரப்பட்டைகளை பவுடர் செய்யும் மில்லில் தங்கி வேலைப் பார்த்து வருகிறார். சின்தோமணிபோரோவும் தனது மகன்களுடம் இங்கு தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்ந பலரும் இந்த மில்லில் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், அங்கு வேலை பார்த்து வந்த சின்தோமணிபோரோவுக்கும், சுபோல்முர்மோவுக்கும் திருமணம் மீறிய உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இளைஞர் சுபோல்முர்மோவை, சின்தோமணிபோரோ தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுபோல்முர்மோ, தான் ஊருக்கு செல்வதாக கூறியதாகவும், அதற்கு அந்த பெண் சின்தோமணிபோரோ, `ஊருக்கு போகணும்னா என்னை கொன்று விட்டு போகணும்’ என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த அந்தப் பெண் உட்பட அனைவரும் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பெண்ணுக்கும், அந்த இளைஞருக்கும் இடையில் திருமணம் குறித்த வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, சுபோல்முர்மோ, ‘நான் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது. நான் ஊருக்கு செல்கிறேன்’ என்று கூறியுள்ளார். ஆனால், அந்த பெண், ‘என்னை திருமணம் செய்து கொள். இல்லையேல் என்னை கொன்று விட்டு, பிறகு ஊருக்கு போ’ என்று கூறியுள்ளார்.

அப்போது, மது போதையில் இருந்த சுபோல்முர்மோ, அந்த பெண்ணின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் அந்த பெண் மயங்கி கீழே விழுந்துள்ளார். அதை பார்த்த இரண்டு மகன்களும் கதறி அழுதுள்ளனர். குரல் வளையை பிடித்து நசுக்கியதில் அந்தப் பெண் சம்பவ இடத்திலியே பரிதாபமாக பலியானார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள், இது குறித்து வேலாயுதம்பாளையம் காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீஸார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று பார்த்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த பெண்ணின் உடலை உடற்கூராய்வு செய்வதற்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதோடு, அந்தப் பெண்ணைகொன்ற இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். திருமணம் மீறிய உறவில் வடமாநில பெண் ஒருவரை அதே மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.