மாரத்தான்: 2,200 பதக்கங்கள் திருட்டு… பழைய இரும்பு கடையில் விற்பனை செய்ய திட்டமிட்ட 6 பேர் கைது!

மும்பையில் இரண்டு நாள்களுக்கு முன்பு மாரத்தான் போட்டி நடந்தது. இப்போட்டியில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்டு வெற்றி பெறாவிட்டாலும், முழுமையாக ஓடி இருந்தால் அவர்களுக்கு பதக்கம் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 42 கிலோமீட்டர் தூரம் கொண்ட முழு மராத்தான் ஓட்டத்தை 500 பேர் ஓடி கடந்தனர். அவர்கள் அனைவருக்கும் பதக்கம் கொடுக்கவேண்டும். அவர்கள் முழு ஓட்டத்தை முடித்துக்கொண்டு பதக்கம் வாங்கும் கவுன்டருக்கு சென்ற போது அங்கு பதக்கம் இல்லை என்று சொன்னார்கள். பதக்கங்கள் திருட்டு போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் வீரர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

புனேயை சேர்ந்த உஜ்வாலா என்பவர் இது குறித்து கூறுகையில், ”காலை உணவுக்கு பணம் கட்டி இருந்தோம். அதோடு மாரத்தான் ஓட்டத்தை முடித்தோம். அப்படி இருந்தும் பதக்கமும் கொடுக்கவில்லை. சாப்பாடும் கிடைக்கவில்லை. ஆசியாவின் மிகப்பெரிய மாரத்தான் போட்டியில் இந்த ஆண்டு கலந்து கொண்டது மோசமான அனுபவத்தை கொடுத்தது” என்றார். மற்றொரு தடகள வீரர் மந்தர் இது குறித்து கூறுகையில், ”முழு மாரத்தானை பூர்த்தி செய்தவர்களுக்கு பதக்கம் கொடுப்பார்கள். ஆனால் நாங்கள் முழு மராத்தானை பூர்த்தி செய்துவிட்டு பதக்கம் கேட்டு சென்ற போது பதக்கம் இருந்த பாக்ஸ் காணாமல் போய்விட்டதாக தெரிவித்தனர்” என்று வருத்தப்பட்டார்.

மேலும் இருந்த பதக்கங்களை கொடுத்ததிலும் குளறுபடி ஏற்பட்டது. 21 கிலோமீட்டர் மராத்தனை ஓடி கடந்தவர்களுக்கு 42 கிலோமீட்டர் தூரத்தில் ஓடுபவர்களுக்கு கொடுக்கும் பதக்கத்தை கொடுத்து குளறுபடி செய்தனர். முழு மாரத்தான் ஓடிய அனைவருக்கும் கூரியர் மூலம் பதக்கம் அனுப்பி வைக்கப்படும் என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் உறுதியளித்துள்ளனர். 42 கிலோமீட்டர் மராத்தானில் 10,711 பேர் பங்கேற்றனர்.

பதக்கங்கள் திருட்டு போனது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போலீஸில் புகார் செய்தனர். ஆஸாத் மைதான் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் சம்பவ இடங்களில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் சோதிக்கப்பட்டது. இதில் ஒப்பந்த தொழிலாளர்கள் பதக்கங்களை திருடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 2,200 பதக்கங்களை 6 ஒப்பந்த தொழிலாளர்கள் திருடி இருந்தனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ”கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 620 பதக்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் அவற்றை பழைய இரும்பு கடையில் விற்பனை செய்து பணம் சம்பாதிக்க திட்டமிட்டு இருந்தனர். அவர்கள் மொத்தம் 2200 பதக்கங்களை திருடி இருந்தனர். அவற்றின் மதிப்பு ரூ.4.90 லட்சம் ஆகும். மும்பை ஜிம்கானா மைதானத்தில் தற்காலிக குடிலில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பதக்கங்களை வைத்திருந்தனர். அதில் இருந்த 2200 பதக்கங்கள் காணாமல் போய்விட்டது” என்று தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.