நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 162 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

மவுண்ட் மவுன்கானுய்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது.

இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 511 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 240 ரன்களும், வில்லியம்சன் 118 ரன்களும் குவித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அந்த அணியின் கேப்டன் நீல் பிராண்ட் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 80 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

இதனால் அந்த அணி 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கீகன் பீட்டர்சன் 45 ரன்களும், டேவிட் பெடிங்காம் 32 ரன்களும் சேர்த்தனர்.

நியூசிலாந்து அணி சார்பில் மேட் ஹென்ரி, மிட்செல் சான்ட்னர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். கைல் ஜாமிசன், ரச்சின் ரவீந்திரா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

349 ரன்கள் முன்னிலை பெற்றும் நியூசிலாந்து பாலோ-ஆன் கொடுக்காமல் 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.